Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Thursday, December 18, 2014

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் செய்தி

                           
                                                              (பழுலுல்லாஹ் பர்ஹான்)

எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படவுள்ளது. இத்தேர்தலில் வாக்களிப்பது ஒவ்வொருவரினதும் உரிமையாகும். எனவே இதன் அடிப்படையில் நம்நாட்டு முஸ்லிம்கள் தமது வாக்குரிமையை பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வினயமாக வேண்டிக் கொள்கின்றது.

இவ் விடயம் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஊடகப் பிரிவின் செயலாளா; அஷ்-ஷைக் பாழில் பாரூக் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வோh; தனக்கு ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து நிச்சயம் ஈடேற்றம் பெறுவா; என்பது உண்மையாகும். நபிமாh;களின் வரலாறு இதற்குச் சான்றாகும்.

எனவே முஸ்லிம்கள் பெரும்பாவங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதிலும்  அல்லாஹுதஆலாவூடனான தமது தொடா;பைச் சீராக்கிக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இபாதத்துக்களில் அதிகளவூ தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவூம் வேண்டும்.

நிச்சயமாக நமது நல்லமல்கள் முஸ்லிம்களுக்கு குறிப்பாகவூம் நாட்டு மக்களுக்கு பொதுவாகவூம் நிம்மதியையூம் சுபீட்சத்தையூம் கொண்டு வரும் என்பது உறுதியான விடயமாகும்.

ஜனநாயக நாடொன்றில் பலதரப்பட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடலாம் என்பது அனைவரும் அறிந்ததே. எவரும் தான் விரும்பும் வேட்பாளரை ஆதரிப்பது அவரது உரிமையாகும். இந்நிலையில் 90 வருடங்களை கடந்து இயங்கிவரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு அரசியல் சாயத்தையூம் பூசிக்கொள்ளாத நிறுவனம் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

எனவே  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு கட்சிக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ செயல்பட மாட்டாது. எனவே எவரும் ஜம்இய்யாவின் பெயரைப் பயன்படுத்தி பிரச்சாரங்கள் செய்ய வேண்டாம் என ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.எனினும் காலத்தின் தேவையை கருத்திற்கொண்டும் முஸ்லிம்களின் உரிமைகளையூம் நலன்களையூம் பெற்றுக் கொள்ளவூம் ஆட்சியிலுள்ளஇ ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் என்று பல தரப்பினர்களையூம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வாழும் இந்நாட்டில் முஸ்லிம்களது உரிமைகளையூம் நலன்களையூம் பாதுகாக்க முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒற்றுமையூடனும் புத்திசாலித்தனமாகவூம் நடந்துகொள்ள வேண்டும். முஸ்லிம் சமூகத்தை அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவப் படுத்துவோர் தக்வாஇ அமானிதம் பேணுதல் மற்றும் தூரநோக்கு  போன்ற உயர்ந்த பண்பாடுகளைக் கொண்ட முன்மாதிரியானவர்களாக தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக பல தீய சக்திகள் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையில்இ சுயலாபங்களை மறந்துஇ தமக்குள் திட்டிக் கொள்வதை நிறுத்திஇ கட்சி பேதங்களை ஓரங்கட்டிஇ பொது இலக்குகளை நோக்கியூம் பொது பிரச்சினைகளுக்கு தீர்வூகாணும் வகையிலும் செயற்பட வேண்டும் என்று முஸ்லிம் அரசியல்வாதிகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வினயமாக வேண்டிக் கொள்கின்றது.


தேர்தல் காலங்களில் பிரச்சினைகள்இ அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் ஒழுக்க விழுமியங்களைப் பேணி நடந்துகொள்ளுமாறு அரசியல்வாதிகள் உட்பட அனைத்து தரப்பினர்களையூம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வினயமாக வேண்டிக் கொள்கின்றது. தேர்தல் நடைபெறும் நாட்களில் வீண் பிரச்சினைகளிலும் தர்க்கங்களிலும் ஈடுபடுவதையூம் பொய் வதந்திகளை பரப்புவதையூம் மற்;றவர்களுக்கு தொந்தரவூ ஏற்படும் வகையில் நடந்துகொள்வதையூம் தவிர்ந்துகொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைத்து முஸ்லிம்களையூம் அன்பாக கேட்டுக்கொள்கின்றது.

மேற்கூறப்பட்ட அறிவூறுத்தல்களைக் கவனத்திற்கொண்டு ஆலிம்கள்இ குறிப்பாக  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட மற்றும் பிரதேச கிளைகள்  பொதுமக்களை வழிநடாத்த வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஊடகப் பிரிவின் செயலாளா; அஷ்-ஷைக் பாழில் பாரூக் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.