Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Sunday, June 12, 2022

குருந்தூரில் புத்தர் சிலை அமைத்தல் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது

 தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, 'கபோக்' கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்துக்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமாக இன்று (12) முன்னெடுக்கப்பட்ட முயற்சி, தமிழ் மக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகளின் ஆர்ப்பாட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது.


குருந்தூர் மலை தொடர்பில் ஏற்கெனவே முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று, குருந்தூர்மலையில் எவ்வித மதக் கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாதென முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் உத்தரவிடப்பட்டிருந்தது.

இவ்வாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவினை மீறி அங்கு தொல்பொருள் அகழ்வாராட்சி என்னும் போர்வையில் புதிதாக பாரிய அளவில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டினையடுத்து அரச அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை லீவு


 எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற் கொண்டு, அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் சந்தர்ப்பத்தை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருந்து பணியாற்ற சந்தர்ப்பம் வழங்கப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.


Wednesday, October 20, 2021

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு

 மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 31 ஆம் திகதி வரையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது