யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயா்ந்து மீண்டும் யாழில் குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள் இழந்த சொத்துக்களை மதிப்பீடு செய்யும் பணிகளை யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் நாளை வெள்ளிக்கிழமை முதல் மூன்று தினங்களுக்கு மேற்கொள்ளவுள்ளது.
அண்மையில் யாழ் அரசாங்க அதிபருடன் இடம் பெற்ற கலந்துரையாடலினையடுத்தே இந்த பணிகளை சம்மேளனம் மேற் கொள்ள திட்டமிட்டுள்ளது.
சுமார் 60 பேர்கள் வரை இந்த மதிப்பீட்டு பணிகளுக்கு ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
நாளை முதற்கட்டமாக பஸார் வீதி,செம்மாதெரு,பொம்வெளி பகுதிகளிலும்,சனிக்கிழமை ஹாதி அபூபக்கர் வீதி,கலீபா அபுபக்கர் வீதி அத்தோடு இதற்கிடைப்பட்ட குறுக்கு வீதிகள்,முஸ்லிம் கல்லுாரி வீதி வரையும்,6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாணிப்பாய் வீதி,ஜின்னா வீதி,ஆஸாத் வீதி மற்றும்,இவற்றுக்கிடையேயான குறுக்கு வீதிகள், மற்றும் சுற்றுவட்டாரங்கள்,முஸ்லிம் கல்லுாரி வீதி ஒட்டுமடம் வரை மேற்கொள்ளப்படவுள்ளது.
அதே வேளை காணி உறுதிகளின் பிரதிகள்,வரிப்பணபற்று சீட்டின் பிரதிகள்,கட்டிடத்தின் வரைபடம் அல்லது அன்னளவான வரைபடம்,முன்னைய புகைப் படங்கள் இருப்பின் அன்றைய தினம் மதிப்பீட்டினை மேற்கொள்ளவரும் பொறுப்பாளரிடம் சமா்ப்பிக்குமாறு வேண்டப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment