கிழக்கு மாகாணத்தில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்க கடைகளில் நுகர்வோருக்கு வழங்கவெனபோதுமான அளவு பொருட்கள் கையிருப்பில் இருப்பதால் நுகர்வோர் அச்சம் கொள்ள தேவையில்லையென கிழக்கு மாகாண கூட்டுறவு துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு முகம் கொடுக்கும் அளவுக்கு தவையான உணவுப் பொருட்கள் இருப்பதாக தெரிவித்த அவா்,எங்காவது பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது,பிரதேச செயலாளர்கள் கோறிக்கைவிடும் பட்சத்தில் அதனை உடன் வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்குமாறு கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர்.எம்.சீ.எம்.ஷரீபுக்குமாகாண அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளார்.
No comments:
Post a Comment