ஆப்கானிஸ்தானில் சாலையோரம் குண்டுவெடிப்பு : 7 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் அரசு மற்றும் நேட்டோ படைகளுக்கு எதிராக தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஹெராட் மாகாணத்தில் ஷிந்தாந்த் நகரில் நேற்று சாலையோரம் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் டிராக்டரில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு ஒருபுறம் முயற்சி நடந்து வரும் வேளையில், பொதுமக்களின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அரசு மற்றும் நேட்டோ படைகளுக்கு எதிராக தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஹெராட் மாகாணத்தில் ஷிந்தாந்த் நகரில் நேற்று சாலையோரம் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் டிராக்டரில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு ஒருபுறம் முயற்சி நடந்து வரும் வேளையில், பொதுமக்களின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment