Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Monday, October 1, 2012

முல்லைத்தீவில் பல பாடசாலைக்கட்டிடப் பணிகள்-ஜனாதிபதியின் இணைப்பாளர் ஆரம்பித்து வைத்தார்

 
இன்று  மகிந்தோதய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முல்லை மாவட்டத்தில் 05 பாடசாலைகளில்  இரு மாடிக்கட்டடத்தின் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. மு/உடையார்கட்டு ம.வி, மு/முத்தையன்கட்டு வலதுகரை ம.வி,மு/மாங்குளம் ம.வி,மு/ ,பாண்டியன்குளம் ம.வி,மு,யோகபுரம் ம.வி என்பவற்றில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது.

மு/உடையார்கட்டு ம.வி இல் இன்று காலை  பாடசாலை அதிபர் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில்  சிறப்பு விருந்தினர்களாக ஜனாதிபதியின் முல்லை மாவாட்ட இணைப்பளர் ச.கனகரத்தினம், முல்லை வலய பதில் கல்விப்பணிப்பாளர் மாலினி வெற்றின் ஆகியோர் காலந்து கொண்டனர். அத்துடன் புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி அதிகாரி, வலய தொழில்நுட்ப உத்தியோகத்தர், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

1.2 மில்லியன் நிதியுதவியுடன் அமைக்கப்படும் இக் கட்டிடத்தில் கணித ஆய்வுகூடம், மொழி ஆய்வு கூடம், தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம், அழகியல் கூடம் போன்றவற்றைக் கொண்டிருக்கும்.இதனை 06 மாதத்திற்குள் அமைப்பதற்கு அதிமேதகு ஜனாதிபாதியால் சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஜனாதிபதியின் இணைப்பாளர் எஸ்.கணகரத்தினம் தெரிவித்தார்.






No comments:

Post a Comment