முல்லைத்தீவு
மாவட்டத்தில் நீண்டகாலமாக நியமிக்கப்படாமல் இருந்த சுகாதார தொண்டர்களுக்கான நியமனக்
கடிதங்கள் 2012.05.01 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
முல்லைத்தீவில்
தற்போது 90 சதவீதமான மீள்குடியேற்றங்கள் இடம் பெற்றுள்ள நிலையில் இங்குள்ள வைத்தயிசாலைகள்
மற்றும் மத்திய மருந்தகங்கள்,சகாதார நிறுவனங்களில் பணியாற்ற போதுமான ஆளணி பற்றாக்குறை
இருந்து வந்தது குறித்து ஜனாதிபதியின் இணைப்பாளர் சதாசிவம் கணகரத்தினம்,வன்னி மாவட்ட்
அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சரமான் றிசாத் பதியுதீன் ஊடாக வடமாகாண ஆளுநரின்
கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார்.
இந்த
நியமனங்களின் அவசியம் குறித்தும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வடமகாண அளுநர்,மேஜர் ஜெனரல்
ஜீ.ஏ.சந்திரசிறியுடன் கலந்துரையாடல்களை பல முறை நடத்தியதுடன்,இந்த நியமனங்களின் அவசியம்
குறித்து வலியுறுத்தி வந்துள்ள நிலையில் இந்த நியமனங்கள் இன்று வழங்கப்ட்டன.
முல்லைத்தீவு
மாவட்ட வைத்தியசாலையில் வைத்து ஜனாதிபதியின்
இணைப்பாளர்,முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கணகரத்தினத்தினால்
வழங்கப்பட்டன.இதில் சுகாதரா பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் திலீபன்,சுகாதார வைத்திய
அதிகாரி,எஸ்.சிவஜேந்தன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment