Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Friday, May 4, 2012

கரைத்தீவில் உள்ள பிரதேச சபையை அகற்ற வேண்டாம் மக்கள் ஆர்ப்பாட்டம்

புத்தளம் மாவட்டத்தில்  அமைந்துள்ள வண்ணாத்தவில்லு பிரதேச சபையின் பிரதான
அலுவலகம் இயங்கி வந்த கரைத்தீவிலிருந்து அதனை வண்ணாத்தவில்லுவுக்கு
இடமாற்றம் செய்ய வண்ணாத்தவில்லு பிரதேச சபை தலைவர் எடுத்த நடவடிக்கைக்கு
எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.


வண்ணாத்தவில்லு பிரதேச சபையின் ஆளுங்கட்சி சிபான்மை உறுப்பினர்களும் இந்த
ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டனர்.வண்ணாத்தவில்லலுவயில் உளள் பிரதேச
சபையின் தலைவரின் ஆலவலகத்தை முற்றுகையிட்ட ஆரப்பாட்டக் காரர்கள் தமது
கோறிக்கைக்கு நியாயம் கிடைக்கம் வரை இங்கிருந்து செல்லப் போவதில்லையென்று
தெரிவித்தனர்.

இதனையடுத்து பிரதேச சபை தலைவர் அந்த அலுவலகத்தை அகற்றப் போவதில்லையென்ற
உறுதி மொழியினை வழங்கியதன் பின்னா் ஆரப்பாட்டக் காரர்கள் அங்கிருந்து
களைந்த சென்றனர்.
கடந்த வண்ணாத்தவில்ல பிரதேச சபை தேர்தல்களில் ஆட்சிக்கு வந்த ஜக்கிய
தேசிய கட்சி,மற்றும் ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பனவற்றின்
பிரதேச சபை தலைவர்களாக முஸ்லிம்களே இருந்து வந்துள்ள நிலையில் இம்முறை
ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட பெரும்பான்மை வேட்பாளர்
சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டதையடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment