புத்தளம் முஸ்லிம் மாணவர் அமைப்பின் நீர் சிக்கன பணி...
ஜமாத்தே இஸ்லாமியின் கீழ் செயற்படும் முஸ்லிம் மாணவர் அமைப்பு எதிர்வரும் 23 ஆ ம் மற்றும் 24 ஆம் திகதிகளில் உலக நீர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுக்கவுள்ளது.
சமூக சேவைப்பணியில் முஸ்லிம் மாணவர் அமைப்பு பல்வேறுபட்டட காத்திரமான பங்களிப்பினை கடந்த காலங்களில் செய்து வந்த போது,கால்தின் தேவையுணர்ந்து நீண்டகால நன்மை பயக்கும் திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
அது குறித்து புத்தளம் பிரதேச செய்தித் துறை சார்ந்தவர்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு இன்று இரவு இஷா தொழுகையினையடுத்து புத்தளம் எஸ்எப்ஆர்டி மண்டபத்தில் நடத்தியது.
அமைப்பின் செயலாளர் எம்.எச்.எம்.நதீர் மற்றும் சமூக சேவை பிரிவு பொறுப்பாளர் அர்ஷத் அலி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
23 ஆம் திகதி இஷா தொழுகையினையடுத்து புத்தளம் போல்ஸ் வீதி மைதானத்திலும்,24 ஆம் திகதி கடற்கரை சந்தியிலும் நீர்சிக்கனம் தொடர்பான விவரணப படங்களை மக்களை அறிவூட்ட காண்பிக்கவுள்ளதாக இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment