மதம் என்ற எல்லைகளை கடந்து மனித நேயம் கொண்ட ஒரு மதத் தலைவராக அமரர் சிவ ஸ்ரீ சபா மனோகரக் குருக்களின் பணிகள் அமைந்திருந்ததாக தெரிவித்துள்ள அகில மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவரது மறைவானது மன்னார் மாவட்ட .இந்து மக்களுக்கு மட்டுமன்றி இன ஒற்றுமையை விரும்பிய அனைத்து மக்களுக்கும் பெரும் இழப்பாகும் என்றும் கூறியுள்ளார்.
ஜெனீவா சென்றுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் மன்னார் மாவட்ட இந்து மத பிரதம குருவின் மறைவு செய்தி கிடைத்ததும்,இது குறித்த தமது ஆழ்ந்த கவலையினை தெரிவித்துள்ளார்.
கடந்த பல வருடங்களாக மிகவும் நேசத்துடன் மக்களுடன் பழகிய,மக்களின் துன்ப துயரங்கள் அறிந்து இனங்களுக்கிடையில் நெருக்கத்தை தக்க வைத்துக் கொள்வதில் அமரர் சிவ சபா மனோகர குருக்கள் ஆற்றியுள்ள பணிகளை மன்னார் மாவட்ட மக்களுக்கு பெறுமதியானது என்பதை மறந்துவிட முடியாது என்பதையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் நினைவுபடுத்தியுள்ளார்.
எவ்வேளையிலும் எளிமையாகவும்,இனங்களுக்கிடையில் புரிந்துணர்வையேற்படுத்துவதைனை செயலாக கொண்ட மதத் தலைவரொருவரின் மறைவு குறித்து தாம் ஆழ்ந்த கவலையடைவதாகவும்,அவரது இழப்பால் ஆழ் துயரில் உள்ள மக்களுக்கு தமது கவலையினையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment