தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் வேண்டுகோளொன்றை முன்வைத்த வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்,தாமும் அவர்களது நியாயமான கோறிக்கைகளை உள்வாங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் கூறினார்.
வவுனியா தமிழ் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சனிக்கிழமை வ்வுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்,வினோனோகதாரலிங்கம்,மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள்,பிரதி நிதிகள்,கிராம அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் அமைச்சர் றிசாத் பதீயுதீன் அங்கு பேசும் போது கூறியதாவது –
கடந்த கால யுத்தத்தை தோற்றுவித்தவர்கள்,அதற்கு துனை போனவர்கள் யாரென்பதை இன்று மக்கள் நன்கு அறிவர்.அவர்களினால் பாதிக்ப்பட்ட விதவைக்குடும்பங்கள்,,அங்கவீனர்கள்,அப்பாவி பொதுமக்கள் என பட்டியலிட்டுப் போகலாம்.தற்போது யுத்தமற்ற ஜனநாயக ரீதியான சூழலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்தியுள்ளார்.இந்த நிலையில் மக்கள் அபிவிருத்திகள் பற்றி எதிர்பார்ப்புடன் இருக்கும் போது,தங்களால் பேசித் தீர்த்துக் கொள்ளக் கூடிய பிரச்சினைகளை ஊடகங்களுக்கும்,சர்வதேசத்துக்கு பிழையாக கூறும் பணிகளை செய்வதிலிருந்து விலகுவது தான் இம்மாவட்ட மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்யும் கைங்கரியமாகும்.
இவ்வாறு இல்லாதவற்றை பெரிதாக காட்ட முனைவதன் மூலம் ஏனையவர்களுக்கு வன்னியில் பாரிய பிரச்சினை இருப்பதாக அச்சத்தை தோற்றுவிக்கும்.என தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன்,தமிழர்களையும்,முஸ்லிம்களையும் இன ரீதியாக பிரித்தாளும் பணியை செய்ய வேண்டாம்.அரச அதிகாரிகள் மக்களுக்கு பணியாற்றுபவர்கள்,அவர்களது நேர்த்தன்மை மிகவும் முக்கியம்.எவர் எந்த மத்த்தை சேர்ந்தவராக இருந்தாலும்,தஅவர்களது தேவைகளை பெற்றுக் கொடுப்பதில் நேர்த்தன்மையை பேன வேண்டும் என்பது எனது வேண்டுகோளாகும்.
இந்த மாவட்டத்தின் அபிவிருத்தி குழு தலைவர் என்ற வகையில்.நான் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் பிரதி நிதிகளுக்கு அழைப்பு விடுக்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்.இந்த ஜனநாயக நடை முறையானது எமது மாவட்டத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் அவர்களுக்கான உரிமைகள்,சலுகைகள் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்,ஆனால் சில அரசியல் வாதிகள்,மக்களை பிழையாக வழிநடத்தி அதன் மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடிக்கலாம என கனவு கான்கின்றனர்.
அரசியலுக்கு அப்பால் மனித நேயத்திற்கு முன்னுரிமையளித்து இந்த மாவட்டத்தின்,ஒற்றுமைக்கும்,அபிவிருத்திக்கும் தேவையான அடித்தளத்தை நாம் இட்டுவருகின்றோம்.அந்த பயணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இதய சுத்தியுடன் இணைந்து செயற்பட முன்வருவார்கள் என்றால்,அவர்களுடன் இணைந்து நான் செயற்பட தயாராக இருக்கின்றேன் என்றும் அமைச்சர் றிசாத் பதீயுதீன் கூறினார்.
வ்வுனியா தமிழ் பிரதேச செயலகப்பிரிவில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு அமைச்சர் தலைமையில்,தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டதுடன்,புதிய திட்டங்களுக்கான ஆலோசகைனகளும் முன்மொழியப்பட்டன.
No comments:
Post a Comment