Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Monday, October 31, 2011

அரச அதிகாரிகளின் சிந்தனை இனவாதமற்றதாக இருக்க வேண்டும்-மீண்டும் யுத்தத்துக்கு வன்னியில் இடமில்லை-றிசாத் பதியுதீன் சூளுரை


பிச்சைக்காரன் தனது காலில் உள்ள புன்னை காட்டி காட்டி வாழுவது போன்று,சிலர் வடக்கில் மக்களை பிழையாக வழிநடத்த முனைகின்றனர்.அவர்களது என்னங்கள் மீண்டும் ஒரு இன பிரச்சினைக்கு துபமிடுவதே என தெரிவித்த கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன்,ஒரு போதும் அதற்கு வன்னி மாவட்டத்தில் தான் இடம் கொடுக்கப் போவதிலையென்று சூளுரைத்தார்.


வட மாகாண உள்ளுராட்சி அமைச்சும் ,வடமகாண உள்ளுராட்சி திணைக்களமும் இணைந்து வ்வுனியா நகரத்தில் ஏற்பாடு செய்திருந்த வடமாகாண உள்ளுராட்சி மாநாட்டில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.
வடமாகணத்திலுள்ள 34 உள்ளுராட்ச்சி மன்றங்களின் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின்செயலாளர்திருமதிவிஜயலட்சுமி தலைமையில் இடம் பெற்ற இந்த,வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி,உட்பட அமைச்சுக்களின் செயலாளர்கள்,அரசியல் தலைவர்கள்,மக்கள் பிரதி நிதிகள் என பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு உரையாற்றுகையில்
இன்று வடக்குக்கு தேவை அபிவிருத்தி அந்த அபிவிருத்தியை செய்ய வேண்டியவர்கள் மக்கள் பிரதிநிதிகளும்,,அரச அதிகாரிகளும்.இவர்களில் சிலர் அதனை செய்யாமல்,மக்களுக்கு கிடைப்பதை தடை செய்பவர்களாக இருக்கின்றனர்.அதனால் பாதிக்ப்படுவது அப்பாவி மக்கள்,இந்த அநியாயாத்தை தொடர்ந்து மக்களுக்கு செய்ய வேண்டாம்,அதன் மூலம் அம்மக்களுடைய சாபத்தையடைய நேரிடும் என எச்சரிக்கை செய்யவிரும்புகின்றேன்.
பதவிகளையும்,பட்டங்களையும் வகிப்பவர்கள் தமது முன்னால் உதவி கேட்டுவரும் மக்களை இனவாத கண்கொண்டு பார்க்க வேண்டாம்.அவ்வாறு நீங்கள் பார்பீர்களெனில் நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்கலிகளுக்கு தகுதியற்றர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.வடக்கில் மன்னார்,முல்லைத்தீவு,வுனியா மாவட்டங்களை கட்டியெழுப்பும் பணியினை நான் செய்து வருகின்றேன்,அதே போல்,கிளிநொச்சி,மற்றும் யாழ்
மாவட்டங்களை அபிவிருத்தி செய்யும் பணியில் அமைச்சர டக்ளஸ் தேவானந்தா செயலாற்றுகின்றார்.நாங்கள் இனவாத ,மதவாத,பிரதேச வாத சிந்தனைகளற்றவர்கள்,
கடந்த 30 வருடத்துடன் எமது வடமாகாணத்தை ,ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது பல,பின்னடைவுகளையே கண்டுள்ளோம்.அவர்களது வேகத்துக்கு செல்வதற்கு எமது முயற்சி செயற் திறன் என்பன மிகவும் அவசியமாகும்,இதனை செய்வதற்கு சிலர் தடையாக இருக்கின்றனர்.இப்படிப்பட்ட பணிகளை தடுப்பவர்கள் மீண்டுமொரு  யுத்தத்துக்கு திட்டமிடுகின்றனர்.இவர்களுக்கு சொல்லி வைக்க விரும்புகின்றேன்.அப்படியொரு சந்தர்ப்பம் ஏற்பட ஜனாதிபதியும்,பாதுகாப்பு தரப்பும்,வன்னி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் என்ற வகையிலும் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் .

'மூன்று தசாப்தங்களாக எமது மாகாணம் பல்வேறு இன்னல்களையும் யுத்த வடுக்களையும் அழிவுகளையும் சந்தித்த நிலையில் இவ்வாறானதொரு நிகழ்வு உற்சாகத்தை ஏற்படுத்துகின்றது. . முல்லைத்தீவு மாவட்டமாக இருந்தாலும் சரி மாந்தை கிழக்காக இருந்தாலும் சரி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மின்சார வசதியற்ற பல கிராமங்களுக்கு மின்சாரத்தை வழங்கி அபிவிருத்தி பணிகளுக்கு இட்டுச்செல்கின்றோம்.
கடந்த காலத்தில் தொடர்ச்சியான குண்டு வெடிப்புக்களாலும் வெடிச்சத்தங்களாலும் வீடுகளுக்குள் நிம்மதியாக இருக்க முடியாத சூழ்நிலை காணப்பட்டது. தங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடக்குமோவென சிந்தித்த காலம் போய் இன்று பிள்ளைகளின் நலனுக்காக கூடுதலான காலத்தை செலவழிக்கக் கூடிய காலம் மலர்ந்துள்ளது. 30 ஆண்டுகளாக எத்தனையோ அழிவுகளை சந்தித்தோம். பாடசாலைக்கு சென்ற சிறுவர்கள் உயிருடன் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. பலர் ஊனமுற்றவர்களாக மாறியிருக்கின்றனர்.
தங்களுக்கான தீர்வை இந்த அரசாங்கம் வழங்க வேண்டுமென்பது தமிழ் மக்கள் மத்தியில் இன்று காணப்படுகின்ற ஒரு எதிர்பார்ப்பாகும். இருப்பினும் இதனை எவ்வாறு பெறுவதென்ற விடயத்தில் யதார்த்த சூழ்நிலையை உணர்ந்துகொண்டு ஜனாதிபதியுடன் பேசியே பெற வேண்டும். ஆகக்குறைந்தளவு மனிதனாக கௌரவமாக வாழுகின்ற உரிமையையாவது பெற வேண்டும்.
போராட்டம் முடிவுகளை பெற்றுத்தராவிட்டலும் இன்றைய நிலையில் மக்களின் விருப்பத்திற்கேற்ப எவ்வளவு கூடுதலான அதிகாரங்களை பெற்றுக்கொடுப்பது போன்ற விடயங்களை பேசித் தீர்க்க வேண்டுமேயொழிய வடபுலத்தில் மீண்டும் இரத்த ஆறு ஓடுவதற்கோ அல்லது மீண்டும் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்வதற்கோ எந்த மனச்சாட்சியுள்ள மனிதனும் துணையிருக்கக்கூடாது.                             
பல மில்லியன் ரூபாய்களை செலவு செய்து வடக்கில் மதவாச்சி முதல் தலை மன்னார் வரைக்குமான ரயில் பாதைகளை மீண்டும் புனரமைக்க வேண்டிய நிலைமையேற்பட்டுள்ளது.அவற்றை தற்போது நாம் மன்னெடுத்துவருகின்றோம். ஜனாதிபதியும் அவரது சகோதரர் பசில் ராஜபக்ஷவும் வடமாகாண அபிவிருத்திக்கு பாலங்களையோ குளங்களையோ புனரமைத்துத் தருமாறு கேட்டால் அதனைச் செய்து தருபவர்களாக இருக்கின்றார்கள். இந்த மாகாணம் எல்லோருக்கும் சொந்தமானது. எல்லோரும் சமத்துவமாக வாழவேண்டும். மீண்டுமொரு யுத்தத்தை மீண்டுமொரு இழப்பை ஏற்படுத்துகின்ற பாரிய துரோகத்தை ஏற்படுத்த முடியாது. வன்னி பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பல மில்லியன் ரூபாய்களை செலவு செய்திருக்கின்றோம். இதற்கு அரசாங்க அதிபர்களும் பிரதேச செயலாளர்களும் உள்ளுராட்சிமன்ற ஆணையாளர்களும் சாட்சியாகவுள்ளனர்'
இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, ஜனாதிபதியின் இணைப்பாளர் சிவநாதன் கிஷோர், வடமாகாணசபையின் செயலாளர்கள், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
உள்ளுராட்சி மன்றங்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சி கூடங்களையும் அமைச்சர் பார்வையிட்டார்.









No comments:

Post a Comment