Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, June 11, 2011

புத்தளம் உலுக்காப்பள்ளத்திலிருந்து-மாந்தை பெரியமடுவுக்கான பஸ் சேவை ஆரம்பம்

1990 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேசத்திலிருந்து  வெளியேற்றப்பட்ட மக்கள் புத்தளம் பாலாவி உலுக்காப்பள்ளம் கிராமத்தில் வசித்துவந்தனர்.தற்போது ஏற்பட்டுள்ள சமாதான சூழலையடுத்து இம்மக்கள் அவர்களது சொந்த கிராமங்களான விடத்தல்தீவு மற்றும் பெரியமடு கிராமங்களில் மீள்குடியேறி  வாழ்ந்து வருகின்றனர்.



பாலாவி உலுக்காப்பள்ளம் கிராமத்திலிருந்து பெரியமடு கிராமததுக்கு பயணிக்க வேண்டுமெனில் புத்தளம்-அநுராதபுரம்-மதவாச்சி-உயிலங்குளத்திலிருந்து இக்கிராமங்களுக்கு செல்ல வேண்டிய நிலையேற்பட்டிருந்தது.இதனால் அதிகமான நீண்ட நேர வீண்விரயம்,அதிகரித்த பணச் செலவு என்பன காணப்படுவதாக இம்மக்கள் முறையிட்டனர்.
இதனை கவனத்திற் னொண்ட வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிக துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன்,உலுக்காப்பள்ளத்திலிருந்து,எலுவன்குளம்-சிலாவத்துறை-முருங்கன் ஊடாக இக்கிராமங்களுக்கான நேரடி போக்குவரத்து சேவையினை இன்று ஆரம்பித்து வைத்தார்.
புத்தளம் உலுக்காப்பள்ளத்திலிருந்து இந்த பஸ் சேவை வைபவ ரீதியாக ஆரமப்பித்த வைக்கப்பட்டது.தினந்தோறும் காலை 5.30 மணிக்கு உலுக்காப்பள்ளத்திலிருந்தும்,பிற்பகல் 2.00 மணிக்கு பெரியமடுவிலிருந்து விடத்தல்தீவு ஊடாக இந்த பயணிகள் சேவை  இடம் பெறவுள்ளது.
20 வருடங்களின் பின்னர் இவ்வாறனதொரு சேவை இடம் பெறுவதானது,மீள்குடியேறும் மக்களின் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வாக அமையுமென அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,நெடா அமைப்பின் தலைவரும்,மாந்தை பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவருமான எம்.அமீன்,வடமாகாண ஆளுநரின் பிராந்திய ஆணையாளர். எஸ்.எல்.டீன்,மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான சனுாஸ்,றியாப்,நவ்பில் முசலி பிரதேச சபை தலைவர் எஹியான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment