Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Thursday, June 9, 2011

வக்பு சபைக்கான தலைவர் வெகு விரைவில் நியமிக்கப்படுவார்-பிரதமருடன் சந்திப்பையடுத்து ஹூனைஸ் எம். பி.தெரிவிப்பு




முஸ்லிம்களின் மத சட்டதிட்டங்களை நடை முறைப்படுத்தும் சபையான வக்பு சபைக்கான தலைவர் இது வரைக்கும் நியமிக்கப்படாமல் இருப்பது குறித்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,பிரதமரும்,மத விவகாரங்களுக்கான அமைச்சருமான டி.எம்.ஜயரட்ணவின் கவனத்திற்கு இன்று கொண்டு வந்தார்.
பௌத்த சாசனம் மற்றும் மத அலுவல்கள் பற்றிய ஆலோசணைக் குழு கூட்டம் பாராளுமன்ற குழு அறையில் பிரதமர் தலைமையில் இடம் பெற்ற போதே இவ்விடயம் குறித்து பிரதமரின் கவனத்தை ஈர்க்கச் செய்தார்.
தாம் பாராளுமன்ற பிரவேசத்துக்கு முன்னர் சுமார் 13 வருடங்கள் வக்ப் திணைக்களத்தில் பணியாற்றியதால்,வக்ப் சபையின் முக்கியத்துவம் குறித்து தெரிந்துள்ளதாகவும்,இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் பிரதமரிடம் எடுத்துரைத்தார்.


அதே வேளை இலங்கையிலுள்ள பள்ளிவாசல்களின் பரிபாலர்கள் மற்றும் உலமாக்கல் இவ்விடயம் குறித்து தனது கவனத்துக்கு கொண்டுவநதுள்ளதால்,தலைவர் நியமனத்தின் அவசியத்தையும் பாராளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.
அதே வேளை வக்ப் சபைக்கான உறுப்பினர்களின் நியமனம் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட போதும்,தலைவர் ஒருவர் நியமிக்கப்படாமையால்,சபையின் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலையேற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியதையடுத்து,வெகு விரைவில் இந்த நியமனத்தை செய்வதாக பிரதமர் டி.எம்.ஜயரட்ண உறுதியளித்தாக பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்  தெரவித்தார்.


No comments:

Post a Comment