Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Sunday, April 10, 2011

லொறி தடம் புரண்டதில் 2 பலி,6 பேர் காயம் கொட்டுக்கச்சியில் சம்பவம்


புத்தளத்திலிருந்து ஞாயிறு சந்தை வியாபாரத்தை முடித்துக் கொண்டு நிக்கவரட்டிக்கு சென்று கொண்டிருந்த லொறி புத்தளம் ஆனமடுவ கொட்டுக்கச்சி பகுதியில் வீதியை விட்டு தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில்,அதில் பயணித்தவர்களில் இருவர் பலியானதுடன் மேலும் ஆறு போ் காயங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் வைத்தியசாலை பொலீஸார் தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10.15 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.இவ்வாறு மரணமானவர்கள் அஜன்த விஜயகோன் வயது 35,உபாலி ராஜகருண வயது 30 என பொலீஸார் தெரிவித்தனர்.காயங்களுக்குள்ளானவர்களில் 3 பெண்களும,அடங்குவதாகவும்,அதில் 8 வயது சிறுமியொருத்தியும் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது.

இவ்விபத்தின்  போது சாரதி காயங்களுக்குள்ளாகியுள்ளதாக விவசாரணைகளை ஆரம்பித்துள்ள புத்தளம் போக்குவரத்து பொலீஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment