வன்னி மாவட்டத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியைகளுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று வவுனியா ஆளுநர் விடுதி முன்றலிலும்.மாங்குளம் மகா வித்தியாலயத்திலும் இடம் பெற்றது.
வன்னி மாவட்டத்தில் வவுனியா வடக்கு,தெற்கு மற்றும் முல்லத் தீவு மாவட்டத்தில் முல்லைத் தீவு,துனுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பதிவு செய்த முன்பள்ளிகளின் ஆசிரியைகளுக்கே இக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.253 ஆசிரியைகள் இக் கொடுப்பனவை பெற்றுக் கொண்டனர்.
கைத்தொழில் ,வணிக துறை அமைச் சர் றிசாத் பதியுதீன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக், ஜனாதிபதியின் முல்லை தீவு மாவட்ட இணைப்பாளரும்,முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சதாசிவம் கணகரத்ணம் ,வட மாகாண கல்வி அமைச்சின் பதில் செயலாளர் இ.ரவீந்திரன்,மாகாண கல்வி பணிப்பாளர்,உட்பட அதிகாரிகள் பலரும் இதன் போது கொடுப்பனவுகளை வழங்கி வைத்தனர்
No comments:
Post a Comment