Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Monday, March 21, 2011

அமெரிக்காவின் அட்டுழியம் பல உயிர்கள் காவு

அமெரிக்க, இங்கிலாந்து கூட்டுப்படையினர் நேற்று (ஞாயிறு) மாலை, 124 டொமஹவக் எறிகணைகளை, கடாபி இராணுவ இலக்குகள் மீது வீசியுள்ளன. இதையடுத்து பின்வாங்கியுள்ள கடாபி இராணுவம் உடனடி யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
இதேவேளை, கடாபி தங்கியிருக்கும் இடத்தை குறிவைத்து ஒரு போதும் தாக்குதல் நடத்த போவதில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும் எல்லைக்குட்பட்ட இராணுவ தாக்குதலையே தாம் நடத்திவருவதாகவும், பொது மக்கள் ஒரு போதும் தமது இலக்காக மாற மாட்டார்கள் எனவும் அது தெரிவித்துள்ளது. இதேவேளை இன்றைய தாக்குதலில் கொல்லப்பட்ட கடாபி இராணுவத்தினரின் சடலங்கள் மற்றும் தாக்குதலுக்குள்ளான இடங்களின் தேசங்கள் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அரேபிய நாடுகள், இத்தாக்குதலுக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன. உயிரிழந்த ஆபிரிக்க இராணுவ வீரர்களின் உறவினர்களும் கதறியழுதுவருகின்றனர்.
பெங்காஷி நகரில் அமெரிக்க - இங்கிலாந்து கூட்டுப்படைகளின் தாக்குதலில் கொத்து கொத்தாக வீழ்ந்த எறிகணைகளால், கடாபி இராணுவத்தினரின் கனரக ஆயுதங்கள் அனைத்தும் கடும் தேசத்திற்கு உள்ளாகியுள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த, போராட்ட குழுவினர் அங்கு தமது உற்சாக மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.



No comments:

Post a Comment