Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Wednesday, March 23, 2011

இலங்கை நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம்-அமெரிக்காவுக்கு எதிராக

லிபியா மீதான நேட்டோ படைகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமொன்றை நாடாளுமன்றம் இன்று நிறைவேற்றியுள்ளது.
லிபியா மீதான தாக்குதல் அந்நாட்டின் அப்பாவி மக்கள் பலியாவதற்கே வழிவகுத்திருப்பதாக சுட்டிக்காட்டும் பிரஸ்தாப தீர்மானம், அதன் காரணமாக நேட்டோ படைகளின் தாக்குதலை இலங்கை வன்மையாக கண்டிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு அங்கத்துவ நாடு என்ற வகையில் லிபியா மீதான தாக்குதல்களை இலங்கை அங்கீகரிக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ இல்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் லிபியத் தலைவர் முஅம்மர் கடாபி ஆகியோருக்கிடையில் 1970 களின் ஆரம்பம் தொட்டு நெருங்கிய நட்புறவு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment