Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Thursday, March 3, 2011

புத்தளம் நகர சபையின் நல்லாட்சிக்கு-இஸ்லாத்தின் வழிகாட்டல் பின்பற்றப்பட வேண்டும்



புத்தளம் நகர சபையினை புத்தளம் மக்களின் நலன் காக்கும் நல்லாட்சி மன்றமாக மாற்றுவதற்கு வேட்பாளர்களும்,வாக்காளர்களும் ஆற்ற பணிகளும்,பொருப்புக்களும் தொடர்பாக புத்தளம் ஜமாத்தே இஸ்லாமியின் சமூக விவகார பிரிவு புத்தளம் போல்ஸ் வீதி மைதானத்தில் விழிப்புணா்வு கூட்டமொன்றை நடத்தியது.

புத்தளம் வரலாற்றில் முதன் முறையாக இஸ்லாமிய இயக்கமொன்று இவ்வாறான அரசியல் தொடா்பான கூட்டமொன்றை நடத்தியுள்ளது.
அஷ்ஷேய்க் எச்.எம்.மின்ஹாஜ்,எம்.ஹூசைா் ஆகியோர்,ஜமாஅத்தே இஸ்லாமியின் சமூக சேவைகள் பிரிவின் செயலாளர் எச்.அஜ்மல் ,ஆகியோர்,உரையாற்றினா்.
விழி என்னும் சஞ்சிகையொன்றும் இன்றைய தினம் வெளியிட்டு வைக்கப்பட்டது.இதனை ஆசிரியா் எம்.எச்.எம்.நதீர் வெளியிட்டு வைத்தார்.
இம் முறை புத்தளம் நகர சபைக்கு போட்டியிடும்.ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி,ஜக்கிய தேசிய கட்சி,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,பந்து சின்னத்திலான சுயேட்சைக் குழுவின் வேட்பாளர்களும் இங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
உள்ளுராட்சி மன்ற நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை எஸ்.ஏ.சீ.பி,மரைக்கார் கவிதை வடிவில் சமர்ப்பித்தார்.புத்தளம் நகரத்தின் சுகாதாரம் சம்பந்தமான விவரணமும் திரையிடப்பட்டது.




No comments:

Post a Comment