தற்போது ஆட்சியிலுள்ள ஊழல் நிறைந்த அரசாங்கத்தை மாற்றும் நேரம் வந்துள்ளதாக தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க,தொடர்ந்து இந்த ஆட்சி இருக்குமெனில் மீண்டும் பாரிய விலையேற்றங்களை மக்கள் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை செய்தார்
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து புத்தளம் போல்ஸ் வீதியில் இன்று மாலை இடம் பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மெற்கண்டவாறு கூறினார்.
அன்று ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன அவர்கள்,தாம் ஆட்சியினை பொறுப்பேற்று இரண்டு வருடங்களுக்குள் பாரிய அபிவிருத்தி திட்டங்களை நடை முறைப்படுத்தினார்.அவரால் நடை முறைறப்படுத்தப்பட்ட திட்டங்கள் இன்றும் மக்களால் போற்றப்படுகின்றது.
மகாவலி திட்டம்,துறைமுகம்.பல்கலைக்கழகங்கள்,மற்றும் திறந்த பொருளாதார கொள்கை என்பனவற்றை உதாரணமாக கூறலாம்.ஆனால் தரதிஸ்டம் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டில் யுத்தம் முடிந்தும் பொருட்களு்க்கான விலையினை அதிகரித்தே கொண்டே செல்கின்றார்.இதனை மாற்ற வேண்டும்,மீண்டும் மக்கள் கஸ்டங்களை அனுபவிக்க கூடாது என்பது தான் எமது இலக்காகும்.
கடந்த 4 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கதிர்காமத்தில் ஆற்றிய உரையினை இந்த நாட்டு மக்கள் மிண்டும் நிணைத்து பார்க்க வேண்டும்.பிரபலமான தீர்மாணங்களை எடுத்துக் கொண்டு மக்களை குழியில் தள்ள முடியாது என்று அப்படி என்றால் நாம் கூறுகின்றோம்,கஸ்டமான தீர்மானங்களை எடுத்துக் கொண்டு மக்களை சுபீட்சமான வாழ்க்கைக்கு இட்டு செல்லுமாறு இதை தான் நாம் ஆட்சியில் செய்து காட்டுவோம் என்றும் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.
No comments:
Post a Comment