இடம் பெயர்ந்து புத்தளத்தில வாழும் மக்களை கௌரவமாக அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றும் பணியினை மேற்கொண்டு சாதனை படைத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ச இன்று புத்தளத்தில் தெரிவித்தார்.
புத்தளம் நகர மண்டபத்தில் நடை பெற்ற இந்த கூட்டத்தில் மேலும் அவர் பேசும் போது -
வடக்கில் யுத்தம் முடிவடைந்துள்ளது.இப்போது அபிவிருத்தி இடம் வடக்கிலிருந்து பெறுகின்றது.இந்த அபிவிருத்திகள் எல்லாம் மீண்டும் மக்கள் அவர்களது தாயகத்தில் வாழ்வதற்காகத்தான்.
புத்தளம் நகரம் முக்கிய கேந்திர மையமாகும்,கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் பாலமாக அமையும் தளம் ,இதனை நாம் அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்வோம் என்று அமைச்சர் பசில் ராஜபக்ச கூறினார்.
முன்னால் பிரதி அமைச்சர கே.ஏ.பாயிஸ் இக் கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தார்.
No comments:
Post a Comment