Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Thursday, January 27, 2011

புத்தளம் மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல வேட்பு மனுக்கல் நிராகரிப்பு


எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் 99 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில்,கட்சி சார்பாக 44 வேட்புமனுக்களும்,சுயேட்சை குழு 55ம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன.
இதில் சிலாபம் நகர சபை,வென்னப்புவ பிரதேச சபை,நவகத்தேகம பிரதேச சபை ஆகிய இடங்களுக்கு ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக புத்தளம் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி கிங்ஸ்லி பொ்ணான்டோ தெரவித்தார்.
அதே வேளை சிலாபம் பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாக்கல் செய்த வேட்புமனுவும் ,நாத்தாண்டிய பிரதேச சபைக்கு மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த வேட்புமனுவும் நிராகரி்க்கப்பட்டுள்ளன.
அதே்தோடு கருவலகஸ்வெவ பிரதேச சபைக்கு லிபரல் கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவுடன்,21 சுயேட்சை குழுக்களின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment