Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Wednesday, January 26, 2011

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பிரதான கட்சிகளினால் இன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.




புத்தளம் மாவட்டத்திலுள்ள 14 பிரதேச சபைகள்,2 நகர சபைகள் என்பனவற்றுக்கு போட்டியிடவென இன்றைய தினம் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் பல வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன.
ஜக்கிய தேசிய கட்சி புத்தளம் மாவட்டத்திலுள்ள நாத்தாண்டிய,சிலாபம்,ஆராச்சிக்கட்டு பிரதேச சபைகளுக்கும்,சிலாபம் நகர சபைக்குமான வேட்பு மனுக்களை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்க பண்டார தலைமையில் இன்று தாக்கல் செய்தது.அதே வேளை மக்கள் விடுதலை முன்னணி சகல உள்ளுராட்சி மன்றங்களுக்கும் தமது வேட்பாளர்களை நிறுத்துவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது.
இது வரைக்கும் 38 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக புத்தளம் தேர்தல் அலுவலக பேச்சாளர் ஒருவா் தெரிவித்தார்.
நாளை ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,ஏனைய கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது



No comments:

Post a Comment