கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் ஏற்பட்டுள்ள கடும் மழையினையடுத்தான வெள்ள பெருக்கால் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 18 அவசர வான் கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து புத்தளம் பழைய எலுவன்குளம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள இக்கிராமத்தில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
அதே வேளை ராஜங்கனை நீர்த்தேக்க கதவுகள் திறக்கப்பட்டதால் நொடிக்கு 28 ஆயிரம் கன அடி நீர் செல்வதாக புத்தளம் வலய நீர்ப்பாசன பொறியிலாளர் ஆர்.சீ.ஜயசிங்க தெரவித்துள்ளார்.
No comments:
Post a Comment