Breaking News
Thursday, January 6, 2011
அமைச்சரி றிசாத் பதியுதீனைஈஅமெரிக்க துாதுவா் பட்ரீஷியா சந்தித்துள்ளார்.
வடக்கில் மீள்குடியேறியுள்ள மக்களது அடிப்படைத் தேவைகள் பெற்றுக் கொடுப்பதற்கு அமெரிக்க தயாராக இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க துாதுவா் பட்ரீஸியா எ புட்டினஸ்,கைத்தொழில் வணிக அமைச்சர் றிசாத் பதியுதீனை இன்று அமைச்சில் சந்தித்த போது தெரிவித்துள்ளார்.
காலை அமைச்சில் இடம் பெற்ற சந்திப்பின் போது,மீள்குடியேறியுள்ள மக்களது சுகாதார மேம்பாடுகளுக்கு அமெரிக்க உதவிகளை வழங்க வேண்டும் என்று அமைச்சர்,துாதுவரிடத்தில் வேண்டுகோளொன்றை முன் வைத்திருந்தார்.
அதே வேளை தற்போது பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அவா்களது சொந்த இடங்களில் மீளக்குடியுர்ந்துள்ளதுடன் அவா்களுக்கான அடிப்படை வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திவருவதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் துாதுவரிடத்தில் சுட்டிக் காட்டினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment