வடக்கிலிருந்து 1990 ஆண்டு தொடக்கம் இடம் பெயர்ந்த நிலையில் வாழும் மக்கள் தற்போது தங்களது பிரதேசங்களில் மீள்குடியேறிவருகின்றனா்.அவ்வாறு மீள்குடியேறி வரும் மக்களுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்டுவந்த மீள்குடியேற்றத்துக்கான உதவுத் தொகை 25 ஆயிரம் ரூபா வழங்கப்படாமை குறித்து விசனம் வெளியிட்டுள்ள பாதிக்கப்பட்டுள்ள மக்கள்,தாங்கள் நீதி மன்றம் செல்ல போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் போர்ச் சூழல் காரணமாக இடம் பெயா்ந்த மக்கள் தமது சொந்த பிரதேசங்களில் மீள்குடியேறுகின்ற போது அவா்களுக்கு இந்த தொகை அப்பகுதி பிரதேச செயலாளர்களின் வழங்கப்பட்டுவந்தது.ஆனால் திடீரென இத்தொகை 2008 ஆம் ஆண்டுக்கு பின்னா் இடம் பெயா்ந்தவா்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என மீள்கடியுற்ற அமைச்சு அறிவித்துள்ளதையடுத்து,1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம் பெயர்ந்த மக்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரவித்துள்ளனர்.
இதே வேளை ஜனாதிபதியின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டுவரப்பட்டுளள போதிலும்,அதிகாரிகள் மட்டத்தில் இது நடைமுறைக்கு வராமலுள்ளது எனவும் மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இவ்விடயம் குறித்து இந்திய துாதுவா் ஆசோக் கான்த புத்தளத்தில் வைத்து இடம் பெயர்ந்த மக்களை புதிய,பழைய என்ற பிரிவில் நோக்க முடியாது எல்லோரும் இடம் பெயாந்தவர்களே என்று தெரவித்ததுடன்,இந்திய அரசாங்கத்தின் உதவி சரியாக சகலருக்கும் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
ஆனால் சில அரசார்பற்ற நிறுவனங்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயற்படுவதாக மக்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment