Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, December 4, 2010

அமைச்சர் பௌசி தில்லையடி வருகை-இடம் பெயா்ந்த மாணவா்களுடன் கலந்துரையாடியனார்.

நகர அபவிருத்தி அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி இன்று புத்தளம் தில்லையடிக்கு விஜயம் செய்தார்.வடக்கிலிருந்து இடம் பெயா்ந்துள்ள மாணவா்கள் கல்வி பயிலும் ரத்மல்யாய ரிசாத் பதியுதீன் மகா வித்தியாலயத்துக்கு சென்ற அமைச்சர் பௌசி,பாடசாலை அதிபா் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

அதே வேளை கல்விப் பொதுத் தராதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவிகளை சந்தித்து அவா்கள் சித்தி பெறுவதற்கு தமது வாழ்த்துக்களையும் அமைச்சர் தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் அமைச்சர் பௌசி முஹாஜிரீன் அரபுக் கல்லுாரிக்கு சென்று மார்க்க கல்வியினை பயிலும்  மாணவா்களையும் சந்தித்தார்.
அமைச்சர் றிசாத் பதியுதீன்,பிராந்திய ஆணையாளர் எஸ்.எல்.டீன்,வடக்கு முஸ்லிம்களுக்கான செயலக  உதவி ஆணையார் எம்.மதீன்,அமைச்சரின்
இணைப்பு செயலாளர் பீ.எம்.றியாஜ் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.



No comments:

Post a Comment