Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Friday, December 3, 2010

தில்லையடி பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து வந்த 12 ஆயிரம் மாணவா்களுக்கு கல்வி கற்பதற்கான வசதிகளை செய்து கொடுத்த புத்தளம் பாடசாலைகள் தரத்தில் உயர வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பாகும் என தெரிவித்துள்ள புத்தளம் வலய தமிழ் பாடசாலைகளுக்கான பணிப்பாளர் எம்.எம்.சியான் அதனது முன்மாதிரி பாடசாலையாக தில்லையடி பாடசாலை  காணப்படுவதாகவும் கூறினார்.

தில்லையடி முஸ்லிம் மகா  வித்தியாலயத்தில் சகல துறைகளிலும் சிறந்து விளங்கிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை அதிபா் எஸ்.எஸ்.எம்.ஹூதைலீன் தலைமையில் இடம் பெற்ற போதே அவா் மேற்கண்டவாறு கூறினார்.


இந்தப்பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு,கல்விக் கல்லுாரிக்கு மாணவா்கள் தெரிவாகியுள்ளனர்.அதே போல் புலமைப் பரிசில் பரீட்சையில் கூடிய மாணவா்கள் சித்தியடைந்துள்ளனர் இது  நல்ல வளர்ச்சியாகும்.
மாணவர்களை உருவாக்குவதில் ஆசியிரியர்களின் பங்களிப்பு இன்றியமையாதது.ஆசிரியர்கள் பெற்றோர்களால் மதிக்கப்பட வேண்டும் என்றும் பணிப்பாளர் எம்.எம்.சியான் கூறினார்.







No comments:

Post a Comment