ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்டத்துக்கான நாடாளுமன்ற உறுப்பினர்,கட்சியின் பிரதி தலைவருமான அல்-ஹாஜ்.எஸ்.கே.நுார்தீன் மசூர் அவா்கள் இன்று காலமானார்.
மாரடைப்பு காரணமாக கொழும்பு தனியார் மருத்துவ மணையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே இவா் மரணமானார்.
1962 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தின் எருக்கலம்பிட்டி கிராமத்தில் பிறந்த நுார்தீன் மசூர் அவா்கள்,தமது ஆரம்ப கல்வியினை எருக்கலம்பிட்டி மத்திய கல்லுாரியிலும்,உயர் கல்வியினை யாழ் பல்கலைக்கழகத்திலும் பயின்று வணிக முகாமைத்துவ பட்டதாரியாக வெளியேறினார்.பிரபல தொழிலதிபரான மசூர் அவா்கள் 2000 ஆம் ஆண்டு இடம் பெற்ற பொதுத் தோ்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றததுக்கு தெரிவான அவா்,ஒரு வருடம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.அதன் பின்னர் மீண்டும் இடம் பெற்ற 2001 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு தெரிவாகி 2004 ஆம் ஆண்டுவரை தேசிய நல்லிணக்க,ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சராகவும்,வன்னிக்கு துணை புரியும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவும் தமது பணியினை ஆற்றியுள்ளார்.
அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு இடம் பெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு மிண்டும் பாராளுமன்றம் தெரிவான மர்ஹூம் நுார்தீன் மசூர்,இரு பிள்ளைகளின் தந்தையாவார்.அன்னார் இறக்கும் போது வயது 48 ஆகும்.
இடம் பெயர்ந்த மற்றும் உள்ளுர் மக்களின் தேவைகளை பெற்றுக் கொடுப்பதிலும்,மக்களுடன் பழகுவதிலும் இனியானவா் மர்ஹூம் அல்.ஹாஜ் மசூர் அவா்கள்,அன்னாரின் இழப்பு முஸ்லிம் சமூகத்துக்கு பேரிழப்பாகும்,
அன்னாரின் கபுறினை சுவனத்தின் பூஞ்சோலையாக அல்லாஹ் ஆக்கியருள்வானாக ....ஆமீன்
No comments:
Post a Comment