புத்தளம் நகர சபையின் 2011 அம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
புத்தளம் நகர சபை தலைவர் எம்.என்.எம்.நஸ்மி தலைமையில் சபை மண்டபத்தில் இன்று கூடிய சபை அமர்வின் போது,சபை தலைவரினால் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டது.
2011 ஆம் ஆண்டின் உத்தேச வருமானமாக 7 கோடி 69 இலட்சத்து 54 ஆயிரத்து 799 ரூபாவாகவும்,உத்தேச செலவீனமாக 7 கோடி 33 இலட்சத்து 16 ஆயிரத்து 445 ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதே புத்தளம் நகர சபை வரலாற்றில் துண்டு விழும் தொகைக்கு பதிலாக,மேலதிகமாக 63 இலட்சம் ரூபாய்கள் வருமானமாக காணப்பட்டுள்ளத
இதனை பின்வரும் திட்டங்களுக்கு செலவு செய்ய உத்தேசித்துள்ளதாக புத்தளம் நகர சபை தலைவர் எம்.என்.எம்.நஸ்மி தெரிவித்துள்ளார்.
ஞாயிறு சந்தை,நகர மண்டபம்,பாதை,மின்சாரம்,குடிநீர்,மற்றும் டிரக்டர்,வாசிக சாலைகளுக்கான புத்தக கொள்வனவு என்பனவற்றுக்கு ஒதுக்கீடு செய்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே வேளை இவ்வரவு செலவு திட்டத்தை சபையில் சமர்பித்த போது வாதப் பிரதிவாதங்கள் இடம் பெற்றன.
ஆளும் கட்சியின் பிரதி தலைவர் சுசன்த புஷ்பகுமார,மற்றும் அபுபக்கர் சதுர்தீன்,சுயோட்சை குழுவின் சார்பில் போட்டியிட்ட உறுப்பினர்களில் ஒருவரான ஏ.எஸ்.எம்.றபீக்,ஆகியோர் தலைவரினால் முன்வைக்கப்பட்ட,வரவு செலவு திட்டத்திற்கு எதிராக பேசிய போதும்,ஜனாதிபதிக்காகவும்,புத்தளம் தொகுதி சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளருக்காகவும் ஆதரவாக தமது ஆதரைவை வழங்குவதாக அறிவித்தனர்.
No comments:
Post a Comment