Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Friday, November 19, 2010

புகையிரத மிதி்பலகையில் தவறி விழுந்த குடும்பஸ்தர் பலி-ஜனாஸா தில்லையடியில் நல்லடக்கம்


கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த புகையிரத வண்டியின் மிதிப்பலகையில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவா் புகையிர தரிப்பு கொங்ரீட் படியில் தவறி விழுந்ததில் அவா் பயணித்த புகையிரதம் மோதியதில் ஸ்தலத்தில் பலியான சம்பவமொன்று நேற்று இரவு பங்கதெனியவில் இடம் பெற்றுள்ளதாக சிலாபம் பொலீஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு பரிதாபகரமாக மரணமானவா் புத்தளம் தில்லையடி அல்-மினா புரத்தை வசிப்பிடமாக கொண்ட,யாழ்ப்பாணத்தை சேர்ந்த முஹம்மத் மிஹ்றாஜ் என்றும் பொலீஸார் தெரிவித்தனர்.
நேற்று வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.நீர்கொழும்பிலுள்ள தமது உறவினரின் வீட்டுக்கு சென்றுவிட்டு  நீர்கொழும்பிலிருந்து புகையிரதத்தில் பிரஸ்தாப குடும்பஸ்தர் புத்தளம் நோக்கி பயணித்த போது,இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை பத்தளம் தில்லையடி மையவாடியில் இடம் பெற்றது.

No comments:

Post a Comment