சிலாவத்துறை அரசினா் கலவன் முஸ்லிம் பாடசாலையில் (2010.11.07) ஆம் திகதி மாலை இடம் பெற்ற மீள்குடியேற்ற மக்களுக்கான காணிப்பிரச்சிணைக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவா் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அமைச்சர் அங்கு பேசுகையில் கூறியதாவது –
தற்போது முசலி பிரதேச செயலகப் பிரிவில் 6242 குடும்பங்களைச் சேர்ந்த 26500 பேர்கள் மீள்குடியேறியுள்ளனா்.குறிப்பாக மன்னார் மாவட்டத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு இடம் பெயா்க்கப்பட்ட முஸ்லிம்கள் இன்றும் தமது குடும்பம் சகிதம் மீள்குடியேறிவருகின்றனர்.இங்கு அவா்களுக்கான காணிகளின் பிரச்சினைகள் உள்ளது.குறிப்பாக சிலாவத்துறையினை பொறுத்தவரையில் இங்கு கடற்படை முகாம் அமைந்துள்ளது.இந்த முகாம் அமைந்துள்ள காணிகள் குடியிறுப்புக்கள் இருந்த இடமாகும்.ஈகவே இங்கு மீளக்குடியேறும் சிலாவத்துறை மக்களுக்கு மாற்று இடங்களை வழங்க நடவடிக்கையெடுக்கப்படடுள்ளது.அந்த வகையில் இன்று 560 குடும்பங்களுக்கு அக்காணிகள் வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மற்றும் நின்றுவிடாமல் இப்பகுதியில் மீள்குடியுறியுள்ள மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுவருகின்றது.ஆனால் சிலா் சில விஷமத்தனமான பிரசாரங்களை தமது அரசியல் லாபங்களுக்காக செய்து வருகின்றனா்.இதற்கு மக்கள் காது கொடுக்காமல் நமது மாவட்டத்தின் ஒற்றுமைக்கும் ,இன் நல்லுறவுக்குமான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வேண்டுகோள்விடுத்தார்.
இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,அமைச்சரின் இணைப்புச் செயலாளார்களான அலிகான் ஷரீப்,எஸ்.யஹ்யான்,முசலி பிரதேச செயலாளா் எஸ்.கேதீஸ்வரன்,சமூகஜோதி எம்.றபீக் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.
No comments:
Post a Comment