Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Friday, March 7, 2014

தெஹிவளை பள்ளியின் செயற்பாடுகளை தொடருமாறு தீர்ப்பு

தெஹிவளை, தாருஸ் ஷாபி பள்ளிவாசலில் தொழுகை மற்றும் குர்ஆன் வகுப்புக்கள் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்தும்படி கங்கொடவில நீதவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தீர்ப்பின் மேன்முறையீட்டு தீர்ப்பு வெள்ளிக்கிழமை (07), முஸ்லிம்களுக்கு சாதகமாக வழங்கப்பட்டுள்ளது.




கொஹுவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்தை வீதி தாருஸ் ஷாபி பள்ளிவாசலில் தொழுகை மற்றும் குர்ஆன் வகுப்புக்கள் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்தும்படி கங்கொடவில நீதவான் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.இந்தத் தீர்ப்பினை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.சுஹைரின் வழக்கறிஞர்களால் மேன்முறையீடு செய்யப்பட்டது.


குறித்த பள்ளிவாசலானது நாடாளுமன்றத்தினால் அங்கிகரிக்கப்பட்ட வகுப் சபையின் அங்கிகாரம் பெற்றதாகும். ஆனால், புத்தசாசன அமைச்சின் சுற்று நிரூபத்தினை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது, நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயலாகும் என வழக்கறிஞர்கள் தமது வாதத்தினை முன்வைத்தனர். 
இதனை ஏற்றுக்கொண்ட நீதவான், ஒலி மாசடைதல் சம்பந்தமாக குறித்த பள்ளிவாசலில் எந்தவித தடயங்களும் இல்லை என மறுத்து, அப்பள்ளியின் நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்திச் செல்லுமாறு தீர்ப்பளித்துள்ளார்