கடமையின் போது மரணமான முதல் பொலீஸ் அதிகாரி என்ற பெயரைப்
பெற்றவர் சபாத் அவர்கள்.இவர் மாவனல்லை பொலீஸ் நிலையத்தில் பணியாற்றியவர்.1864 ஆம் ஆண்டு
மார்ச் மாதம் 21 ஆம் திகதி காலமானார்.
தினத்இந்த தினத்தை நினைவு கூரும் வகையில் வருடந்தோறும் மார்ச்
21 ஆம் திகதி பொலீஸ் வீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது.
பொலீஸ் வீரர்
தினத்தையிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகள் சிலாபம் பொலீஸ் அத்தியட்சகர்
அலுவலகத்தின் முன்றலில் நேற்று (வெள்ளிக்கிழமை 21) இடம் பெற்றது.அதன் போது
பொலீஸாரின் பெயர்கள் பதிவு செய்யப்பட்ட நினைவு துாபி ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டு சிரேஷ்ட
பொலீஸ் அத்தியட்சகர் சாலிய சில்வாவினால் திரை நீக்கம் செய்தும் வைக்கப்பட்டது.
பல்வேறு
விபத்துக்கள்,சம்பவங்களின் போது உயிர் நீத்த பொலீஸ் அதிகாரிகளின் குடும்பத்தினர்
மற்றும் உறவினர்கள் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்