தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பரீட்சைகள் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ள அவசர அழைப்புக்கு தொல்லை தரும் அழைப்புக்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி குற்றப்புலனாய்வுப் பிரிவை கல்வி அமைச்சு கேட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தீய நோக்கம் கொண்ட சிலர், பரீட்சை தொடர்பாக பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். உயிரியல், வினைத்திறன், பொறியியல், பௌத்த நாகரீகம் போன்ற வினாத்தாள்கள் ஐந்து காணப்பட்டதாக பொய்ப் பிரசாரம் செய்யப்படுகின்றது.
நாம் இன்னும் பௌத்த நாகரிகம் வினாத்தாளை அச்சிடக்கூடவில்லை. இந்த பிரசாரத்தின் பின் உள்ளவர்களை கண்டுபிடிக்கும்படி குற்றப்புலனாய்வுப் பிரிவை கேட்டுள்ளோம்.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, உயர்தரப் பரீட்சை பற்றி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
No comments:
Post a Comment