கிழக்கு மாகாண ஆளுநர் அட்மிரல் மொகான் விஜேவிக்ரம மற்றும் முதலமைச்சர்
நஜீப் அப்துல் மஜீத் ஆகியோரை மாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லையென
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாக எடுத்துரைத்துள்ளார்.
கிழக்கு மாகாண சபையில் வீணான பிரச்சினைகளை தோற்றுவிக்கும் விமலவீர
திஸாநாயக்காவை தற்போதைக்கு மாற்ற வேண்டிய நிலை தோன்றியுள்ளதாகவும் ஜனாதிபதி
சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர்
ஆகியோரை நேற்று முன்தினம் அலரிமாளிகைக்கு அழைத்து கலந்துரையாடியபோதே
ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண அமைச்சர்கள் - ஆளுநருடன் முரண்பட்டுக்கொண்டும், ஆளும்
தரப்பு உறுப்பினர்கள் - முதலமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை
சுமத்திக்கொண்டு சபை அமர்வு பகிஸ்கரிப்பிலும் ஈடுபட்டு வரும்
சூழ்நிலையிலேயே மேற்படி ஜனாதிபதி அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment