
ஜெனிவாவில் இருப்பவர்கள் தமிழ் பிள்ளைகளில் கழுத்துக்களில் மீண்டும் சைனற் குப்பிகளை அணிவிக்கவே விரும்புகின்றனர் என வீடமைப்பு மற்றும் பொறியல்துறை அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் குருநகர் தொடர்மாடி வீட்டுத்திட்டத்தின் புனர்நிர்மானப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகைறும் போதே அவர் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.
விமல் வீரவன்ஸ மேலும் கருத்து தெரிவிக்கையில்,
உங்கள் குழந்தைகளின் கழுத்துக்களில் தங்க மாலை அணிவதையா அல்லது சைனற் குப்பிகளை அணிவதையா விரும்புகின்றீர்கள் என தமிழ் மக்களிடம் நான் கேட்க விரும்புகின்றேன்.
தென்னிந்தியாவில் இருப்பவர்கள் மீண்டும் யுத்ததை விரும்புகிறனர். அங்கு ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான நிலமைக்கு காரணம் தனி நாடு கோருகின்றனர். இவர்களின் பகல் கனவு ஏதுவும் நிறைவேறாது.
இறுதி யுத்தம் நடைபெற்ற காலத்தில் கூட இல்லாத கொந்தளிப்பு தென்னிந்தியாவில் இப்போது ஏற்படக் காரணம் பொருமளவான புலம் பெயந்த தமிழர்களின் பணமே.
உண்மையில் தமிழ் மக்களில் அக்கறையற்று இருப்பவர்கள் தமிழ் நாட்டில் இருக்கின்றார்கள். அவர்கள் பிரிவினை வாதத்தை விரும்புகின்றனர். இதையே இங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்து கொண்டு இருக்கின்றது.
சம்பந்தன் பாராளுமன்றத்திற்கு வரும் நாட்களை விட வெளிநாடுகளிலேயே அதிக காலத்தை கழிக்கின்றார். அவருக்கு திருகோணமாலையில் எங்கு தமிழ் குடியிருப்புக்கள் இருக்கிறது என்பது தெரியது.
கடந்த கால யுத்தில் ஏற்பட்ட சூழலை மாற்றுவதற்கே நாம் விரும்புகின்றோம். யுத்தம் தந்த வடுக்கள் தற்போது தமிழ் மக்களின் இதயங்களிலிருந்து அகற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அதேபோல் இடிந்த சிதைந்த கட்டிடங்களை நாங்கள் புனரமைத்து வருகின்றோம்.
யுத்தின் போது இழக்கப்பட்ட இரு தரப்பு உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் எங்களினால் பெற்றுக் கொடுக்க முடியும். யுத்ததின் போது மாண்டு போன குடியிருப்புக்களுக்கு தற்போது உயிர் கொடுத்து வருக்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment