வடக்கிலிருந்து
புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தமது மீள்குடியேற்றத்துக்காக வருகின்ற போது,அதற்கு
எதிரான செயற்பாடுகள் தொடராக இடம் பெற்றுவருகின்றது.முஸ்லிம்கள் தமது காணிகளில் மீள்குடியேற
முடியாத நிலையினை சில விஷமிகள் தோற்றுவித்துவருகின்றனர்.இவ்விடயம் குறித்து பாராளுமன்றத்தில்
அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்த கருத்தானது ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் குரலாகத்த
தான் நாம் பார்க்கின்றோம் என தெரிவித்துள்ள வடமாகாண மஜ்லிசுல் சூறா அமைப்பின் தலைவர்
மௌலவி எம்.ஏ.எம்.முபாரக் (றசாதி) இலங்கையில் வாழ்ந்து கொண்டு இலங்கையின் தேசிய கொடியினை
சம்பந்தன் ஜய்யா ஏந்தியமைக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறி அறிக்கை விட்ட மாவை சேனாதிராஜா
போன்ற அரசியல் வாதிகளின் கருத்து ஏற்றுக் கொள்ளப்பட முடியாதொன்று என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மன்னார்
மாவட்டத்தில சன்னார் கிராமத்தினை பூர்வீகமாக கொண்ட முஸ்லிம்கள் மீண்டும் மீள்குடியேற
வந்த போது,அந்த காணியில் வெளிமாவட்ட போராட்ட குடும்பங்களின் உறவினர்கள் குடியமர்த்தப்பட்டிருந்தனர்.முஸ்லிம்களிடம்
இருந்து அபகரித்த நிலத்ததை வழங்குங்கள் என்று அம்மக்களிடமும்,தமிழ் தேசிய கூட்டமைப்பின்
பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் நாம் கேட்ட போது,செவிடன் காதில் ஊதிய சங்கைப் போன்று
இருந்து விட்டு,இன்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜா,வடமகாண முஸ்லிம்களின்
பிரதி நிதியாக பாரக்கின்ற அமைச்சர் றிசாத் பதியுதீன்,தமிழ்,முஸ்லிம் சமூகத்திற்காக
எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்க முற்பட்டுள்ளதை நாம் வண்மையாக கண்டிக்கின்றோம்.
மதத்
தலைவர்கள் என்பவர்கள் குறித்து புதியபாடமொன்றை மாவை சேனாதி ராஜா போன்ற அரசியல் வாதிகள்
எமக்கு பாடம் சொல்லித் தரத் தேவையில்லை.இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொண்டுள்ள எமது மதமும்,பாதிக்கப்பட்ட.அநியாயம்
இழைக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் எந்த சமூகமாக இருந்தாலும்,அவர்களுக்கு உதவி செய்யுமாறும்
நியாயத்ததையும்,நேர்மையினையும் நிலைநாட்டுமாறு கூறுகின்றது.
குறிப்பாக
வடக்கில் தமிழ் மக்களுக்கு அநியாயம் இழைக்கப்படும் என்றால் அதுவும் முஸ்லிம் தலைமைகளால்
இழைக்கப்படுமென்றால் அதற்கெதிராக போராடி தமிழ் சகோதர இனத்துடன் வீதியில் இறங்கி போராடவும்
நாங்கள் தயாராக இருக்கின்றோம்.அப்படி வடக்கில் தமிழ் சமூகத்துக்கு எந்த அநியாயமும்
இதுவரைக்கும் முஸ்லிம்களாலும்,முஸ்லிம் அரசியல் தலைமைகளாலும் இடம் பெறவில்லையென்பதை
பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவர
விரும்புகின்றேன்.
மன்னார்
மாவட்டத்தை பொறுத்த வரையில் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவினி தலைவர்,அமைச்சர் றிசாத்
பதியுதீன் ஆற்றிவரும் பணிகளை புறக்கணிக்க முடியாது,எமது உரிமையை பெற்றுக் கொள்ள வேண்டும் எனில் அடிப்படை வசதிகள் மேம்பட்டிருக்க
வேண்டும்.இன்று வன்னி மண்ணுக்கு தேவைாயானது அது தான் என்பதை சகலரும் புரிந்து கொள்ள
வேண்டும்.
ஒரு
இனத்தின் சரித்து விட்டு மற்றொரு இனம் ஒரு போது் வாழ முடியாது.தாயக தார்மீக் பூமியில்
முஸ்லிம்கள் வாழவதற்கு இபெரும்பான்மையினை தாம் கொண்டிருக்கின்றோம் இன்று நினைக்கும்
தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகளின்
பின்னணி குறித்து எமது வன்னி மக்கள் தெளிவான அறிவுடன் இருக்கின்றார்கள்.அமைச்சர் றிசாத் பதியுதீன்
பாராளுமன்றத்தில் கடந்த 9 ஆம் திகதி ஆற்றிய உரையின் முழு வடிவமும் ஒளி நாடாவாக இருக்கின்றது.அதில்
தம்புள்ள சம்பவத்தினை குறித்து வடக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக ஜனாதிபதிக்கு மன்னார்
ஆயர் எழுதிய கடிதம் குறித்தே பிரஸ்தாபித்தார்.அவ்வுரை இடம் பெற்ற போது பாராளுமன்றத்தில்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரந்த போதும் அதற்கு எதிராக எக்கருத்ததையும்
கூறாது,சில நாட்களுக்கு பின்னர் தமக்கு ஏற்பட்டுவரும் அரசியல் சரிவை துாக்கி நிறுத்துவதற்காக
தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வீர வசனங்களை பேசுகின்றனர்.
அன்று
அமைச்சர் பாராளுமன்றத்தில் மத பெரயார்களை அவமதித்திருந்தால் பாராளுமன்றத்தின் சிறப்புரிமை
மீறல் தொடர்பில் பேசப்பட்டிருக்கலாம் .அப்பாவி தமிழ் மக்களை உசுப்பேத்தி மத ரீதியான
யுத்தத்தை ஆரம்பிக்க குறிப்பாக எமது மாவட்டமான மன்னாரிலிருந்து இதனை தொடங்க மாவை சேனாதி
ராஜா போன்ற எம்.பிக்கள் செயற்படுவது கண்டனத்துக்குரியது.
பத்திரிகையில்
வெளிவரும் விடயங்களில் அதனை கூறுபவர்களின் நம்பகத் தன்மை என்பது தான் வாசகர்களுக்கு
மிகவும் முக்கியம் .ஏனெனில் நாமும் அந்த வாசகர் வட்டத்தில் இருக்கின்றோம்.வடக்கில்
மீள்குடியேறும் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகாரி மட்டத்தில் இடம் பெறும் கயிறு இழுப்புக்கள்
குறித்து எவரும் பேச வருவதில்லை.முஸ்லிம்களின் மீள்குடியேற்த்திற்கு உதவி செய்தால்
தமிழ் அதிகாரிகளை விமர்சிப்பதும்,அவர்கள் அவர்களது மதத்தளங்களுக்கு செல்வதை தடைகளை
ஏற்படுத்துவதும்,எதிராக விசமப் பிரசாரங்களை செய்வதும் சிலரது பணியாக இருப்பதை நாம்
அறியாதவர்கள் அல்ல.
இன்று
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பிரச்சினைக்குரியதாகவுள்ளது,தமிழ் சகோதரர்கள்
இன்றும் முஸ்லிம்களது காணிகளில் இரக்கின்றார்கள்.அவர்களை பலவந்தமாக வெளியேற்ற முடியாது,எமது
மண்ணில் நாமும் வாழ்வதற்கு இடம் தாருங்கள் என்று விண்ணப்பித்தால் அதனை பரிசிலனை செய்ய
வருடக்கணக்கில் காலம் எடுக்கின்றது.அப்டியென்றால் எமது முஸ்லிம் தலைமைகள் தொடர்ந்தும்
வாய் மூடி மௌனிகளாக இருக்க வேண்டும் என்று மாவை சேனாதி ராஜா போன்றவர்கள் நினைப்பதனாது
நகைப்புக் கிடமானது.முஸ்லிம்களின் மீள்குடியுற்றத்திற்கு உதவி செய்யவிட்டாலும் பரவாயில்லை,தமிழ்
தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்
உபத் துரோகம் செய்யாமல் இருப்பீர்களானால்,அதவே வடக்கில் வாழும் தமிழ் பேசும்
இனத்துக்கு செய்யும் நன்றிக்கடனாகும் என்றும் மௌலவி முபாரக் றசாதி வெளியிட்டுள்ள அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளார்.
Very good movlavi
ReplyDelete