Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Wednesday, March 7, 2012

புத்தளம் ஏ.எஸ்.எம்.றபீக் ஆசிரியருக்கு-கணித ஞானி பட்டம்


               
புத்தளத்தின் கல்வித் துறைக்கும்,கணிதப் பாடத்துறையிலும் அரும் பணியாற்றிய ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏ.எஸ்.எம்.றபீக் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,கல்விக்கும் சமாதானததிற்குமான அமைப்பின் வெளியீடான அறிவியல் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும் இன்று மாலை புத்தளம் என்.பீ.ஜ.கேட்போர் மண்டபத்தில் இடம் பெற்றது.


பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறை விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் பிரதம அதிதியதாக கலந்து கொண்டு ஆசிரியர் றபீக்கிற்கு கணித ஞானி என்ற பட்டத்ததை வழங்கியதுடன்,அவருக்கான நினைவு சின்னத்தையும் வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வின் போது தொழில் பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டவர்களுக்கான சான்றிததழ் என்பனவும் வழங்கப்பட்டன.கல்வி அமைச்சின் முன்னால் பணிப்பாளர் நாயகம் எம்.ஈ.எச.எம்.மஹ்ருப் மரைக்கார்,சட்டத்தரணி புஆத்,புத்தளம் பிரதி கல்வி பணிப்பாளர் ஆர்.எஸ்.ஈ.புஷ்பராஜன் உட்பட பலரும் இதன் போது கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment