இன்று புதன் கிழமை பங்களாதேஷ் தலைநகரான டாக்காவில் நடை பெறவுள்ள பங்களாதேஷ்-இலங்கை இணைந்த வர்த்தக ஆணைக்குழுவின் பொருளாதார மற்றும் தொழில் நுட்ப மாநாட்டில் இலங்கையின் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர றிசாத் பதியுதீன் கலந்து கொள்ளவுள்ளார்.
கடந்த ஆண்டு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும்,பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹஸீனா ஆகியோர் இரு தரப்பு வர்த்தக ஆணைக்குழுவின் செயற்பாட்டை ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடியதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.1993 ஆம் ஆண்டு இறுதியாக இந்த ஆணகை்குழுவின் அமர்வு இடம் பெற்றதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.தற்போது ஆரம்பமாகும் அமர்வு 4 வதாகும்.
இலங்கைக்கும் பங்களாதேசுக்குமான இரு தரப்பு வர்த்தக செயற்பாடுகள் மிகவும் பலமுள்ளதாக காணப்படுவதுடன்,இலங்கை தயாரிப்புக்கள்,மற்றும் எரிபொருள் சார்ந்த பொருட்கள் என்பனவும் பங்களாதேசுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளில் 2010 அம் ஆண்டில் இலங்கை ஏற்றுமதி வருமானமாக அமெரிக்க டொலர் 35.54 மில்லியனை பெற்றுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
No comments:
Post a Comment