வன்னி மாவட்டத்தில் தற்போதைய கல்வி நிலையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை நீக்கி ,மாவட்டத்தை உயர் கல்வி நிலைக்கு கொண்டு செல்வதற்கான வேலைத் திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியா மாவட்ட ஒருங்கினைப்பு,மற்றும் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் கூட்டம் நேற்று செவ்வாய்கிகழமை வவுனியா கச்சேரியில் இடம் பெற்ற போது அமைச்சர் மேற்கன்டவாறு கூறினார்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ,வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி,வ்வுனியா முல்லைத்தீவு,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் அரச திணைக்களங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பேசுகையில் –
கடந்த 5 வருட கால வன்னி மாவட்ட கல்வி நிலை குறைபாடுகள் குறித்து மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது.மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பின்னைடைவு தற்போது வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகளின் முடிவில் காணமுடிகின்றது.இந்த நிலையினை வன்னி மாவட்டத்தில் தொடர்வதற்கு இடமளிக்க கூடாது.
பாடசாலைகளுக்கு தேவையான வளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் என்பன எவ்வித தடைகளுமின்றி பகிர்ந்தளிக்கப்படுகின்றது.வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் என்ற வகையில் எனக்கு கல்வி பணிப்பாளர்களால் சமர்ப்பிக்கப்படும் எல்லா திட்டங்களுக்கும் அனுமதியினை வழங்கி வருகின்றேன்.இதில் எவ்வித மதப்பாகுபாடுகளும் என்னிடத்தில் இல்லை,வன்னி மாவட்ட மாணவர்கள் கற்றலில் உயர் நிலையினையடைவதுடன்,சிறந்த கல்வி மான்களாக வர வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.
பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு தேவையான ஆசிரியர்கள் பற்றாக்குறையாக காணப்படலாம்,கடந்த காலங்களை விட தற்போதைய காலத்தில் தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலில்,வடக்கின் வசந்தத்தின் மூலம் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அவர்களின் பங்களிப்புடன் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் முன்னடுக்கப்பட்டுவருகின்றன.
அதே வேளை வடமாகாண ஆளுநர் சந்திரசிறி அவர்கள் எம்மால் இம்மக்களுக்காக கோறப்படும் சகல தேவைகளையும் பெற்றுத் தருபவராக இருக்கின்றார்.நாம் அபிவிருத்தியை பற்றி சிந்திக்கும் அதே வேளை கல்வியில் முன்னேற்றம் அடைவது எப்படி என்பதை பற்றி சிந்திக்க வேண்டும்.அப்போது தான் எமது மாவட்டம் நல்ல விளைச்சலை பெற்றுக் கொள்ள முடியும்.
மாணவ சமூகம் எதிர்கால சமூகத்தின் வழிகாட்டிகளாக திகழ வேண்டும்.அப்போது தான் நாம் அடையவிருக்கும் இழக்கை பயணிக்க முடியும்,அந்த மாணவ சமூகத்தின் நெறிப்படுத்தல் கல்வி பணிப்பாளர் மற்றும் அதிபர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்களிடம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்
மாவட்டத்தின் கல்வி,சுகாதாரம்,மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.
No comments:
Post a Comment