Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, September 20, 2011

மன்னார் மாவட்டம் பல் துறைகளில் அபிவிருத்தி-அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவிப்பு



மன்னார் மாவட்டத்தின் சகல துறைகளையும் அபிவிருத்தி செய்து மக்களின் வழமையான செயற்பாடுகளை முன்னெடுக்க அரசாங்கம் செயற்படுவதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை(2011.09.19) மன்னார் அரசாங்க அதிபர் பணிமனையில் இடம் பெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மன்னார் மாவட்டம் தற்போது  அபிவிருத்திகளை கான ஆரம்பித்துள்ளது.இதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் காரணமானவர்,பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் இன்று வட மாகாணம் புது பொழிவு பெற ஆரம்பித்துள்ளது.

எமது மக்களின் வாழ்வாதார மேம்பாடுகளை முன்னெடுக்க எடுக்கப்படும் திட்டங்களை எவ்வித பாகுபாடுகளுமின்றி செயற்படுத்துவது அரச அதிகாரிகளின் கடமையாகும்.எமக்கிடையில் பிரதேச வாதங்கள் இல்லை,எமது மாவட்டம்,எமது மக்கள் என்ற உணர்வு தான் இருக்கின்றது.சில திணைக்களங்களின் செயற்பாடுகள் குறித்து மக்கள் எம்மிடம் முறைப்பாடுகளை தெரிவிக்கின்றனர்.அதனை ஆராய வேண்டியுள்ளது.அரசாங்கத்தின் நிதியானது,மக்களது மேம்பாடுகளுக்கு சென்றடைய வேண்டும்,அதனை அதிகாரிகள் விரும்புகின்றதற்கு பயன்படுத்த முடியாது என அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

விவசாயம்,சுகாதாரம்,கல்வி,மின்சாரம்,குடிநீர்,பாதைகள்,உள்ளுராட்சி மன்றங்கள்,போக்கவரத்து,தொடர்பாடல்,வர்த்தகம் மற்றும் கைத்தொழில்,வீடமைப்பு திட்டங்கள் குறித்து இங்கு ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாண ஆளுநர் ஜீ..சந்திரசிறி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹூனைஸ் பாருக்,சிவசக்தி ஆனந்தன்,வினோனோகதாரலிங்கம்,முத்தலிபாவா பாருக், உட்பட ,திணைக்களங்களின் தலைவர்களும் இதில கலந்து கொண்டனர்.




No comments:

Post a Comment