Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Wednesday, August 24, 2011

புத்தளத்தில் வர்ததகங்கள் முடக்கம்





புத்தளம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிமை இடம் பெற்ற மர்ம மனிதர் குறித்த சம்பவத்தையடுத்து ஏற்பட்ட முறுகலில் ஏற்பட்ட அசம்பாவித்த்தினால் புத்தளம் நகரில் தொடர்ந்தும் அச்ச நிலையேற்பட்டுள்ளது.


குறிப்பாக மணல் குன்று பிரதேசத்தில் ஏற்பட்ட முறுகல் நிலையினையடுத்து இந்த அசம்பாவித சம்பவம் ஏற்பட்டதால் புத்தளம் பொலீஸ் நிலைய பொலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தாக்கப்பட்டு,வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமானதால் புத்தளத்தில் பரபரப்பு அதிகரிக்கலாயின.
இந்த சம்பவத்தினையடுத்து கொலையாளி யாரென்பதை கண்டு பிடிப்பதில் இரு பொலீஸ் குழுவும்,கொழும்பு விசேட குற்றத்தடுப்பு பிரிவின் பொலீஸ் குழுவின் அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டு நீதி மன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலீஸார் தெரிவித்தனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவுவிட்டுள்ளார்.
இதே வேளை புத்தளம் நகரமானது முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட நகரமாகும்,தற்போதைய வேண்டத்தகாத சம்பவம் காரணமாக புத்தளம் நகரின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது.நேற்று முன்தினம் புதன்கிழமை நகரின் வாத்தக நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டிருந்த்தால் வாத்தக நடவடிக்கைகள் முடக்கப்பட்டிருந்தன.இன்னும் சில தினங்களில் முஸ்லிம்களின் நோன்பு பெருநாள் கொண்டாடப்படவிருக்கும் நிலையில் குறிப்பாக மாலை நேரத்திற்கு பின்பு நகரின் வாத்தக நிலையங்கள் அச்சம் காரணமாக மூடப்படுவதால்,வியாபாரம் முழுமையாக செயலிழந்துள்ளதாக வர்த்தகர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.வெளியிடங்களிலிருந்து பொருட் கொள்வனவுக்கு வரும் பொது மக்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி   செல்வதை காண முடிகின்றது.
பிரஸ்தாப மர்ம மனிதர் சம்பவத்தையடுத்து கடந்த இரு தினங்களாக புத்தளம் நகரின் குடியிறுப்பு பகுதிகளுக்கு செல்லும் பொலீஸார் கடும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் குடியிறுப்பிலுள்ள உணவகங்கள் மற்றும் மருந்துக் கடைகள் உட்பட ஏனைய வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுவருகின்றன.
புத்தளம் நகரின் நகர சுற்றுவட்டம்,மன்னார் வீதி ,தபாலகப்பகுதி,போல்ஸ் வீதி ஹூதா பள்ளி சந்தி,உள்ளிட்ட பகுதிகளில் இரானுவத்தினர் கனரக வாகனங்கள் சகிதம் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதை காண முடிகின்றது..
பிரதேசத்தின் அமைதிக்கு பங்கம் ஏற்பாடு செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு மத அமைப்புக்கள் பொது மக்களிடம் தொடராக வேண்டுகோள்விடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment