புத்தளத்தில் வாழும் முஸ்லிம்களும் இன்று நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர்.புத்தளம் இஸ்லாமிய வாலிப முன்னணி எற்பாடு செய்திருந்த பெருநாள் தொழுகையும்,கொத்துபா பிரசாங்கமும் புத்தளம் சாஹிரா தேசிய கல்லாரி மைதானத்தில் இடம் பெற்றது.ஜமிய்யத்துல் உலமா சபையின் புத்தளம் தலைவர் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் இதனை நடத்தி வைத்தார்.
பெரும் எண்ணிக்கையிலான ஆண்களும்,பெண்களும் இதில் கலந்து கொண்டனர்.இதே வேளை இந்த மதக் கடமையினையடுத்து அண்மையில் புத்தளத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட பொலீஸ் கான்ஸ்டபிள் நவரத்ன பண்டாவின் மரணம் குறித்து ,இன்றைய தினம் நினைவு கூறப்பட்டது.முஸ்லிம்கள் கையில் கறுப்பு கொடிகளை ஏந்தி இந்த கொலையினை கண்டித்தும்,பாதிக்கப்பட்ட அவரது மணைவி மற்றும் பொலீஸ் அதிகாரிகளுக்கு தமது ஆழ்ந்த கவலையினை வெளியிட்டனர்.இந்த நிகழ்வின் போது மௌலவி அப்துல்லா ஆலிம் அவர்களினால் தீர்மான அறிக்கையொன்றும் வாசிக்கப்பட்டது.நடந்த சம்பவத்துக்கும் ஒட்டு மொத்த புத்தளம் மக்களுக்கும் இந்த விடயத்தில் சம்பந்தமில்லை.இருந்த போதும்,புத்தளத்து மக்கள் தமது மனவருத்தத்தை தெரிவிக்கின்றனர்.இனிமேலும் இவ்வாறான சம்பவமொன்று இடம் பெறாமல் இருப்பதற்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்த்து.
No comments:
Post a Comment