தமிழ் கட்சிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்துவதை போன்று முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்த வேண்டும் என அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஜனாதிபதியிடம்விடுத்த வேண்டுகோளுக்கு சாதகமான பதிலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் குளோபல் தமிழ் செய்திக்கு தெரிவித்துள்ளார்.
தற்போது இடம் பெற்றுவரும் மீள்குடியேற்றப் பணிகள்,மற்றும் வடக்கிலிருந்து 1990 ஆம் முஸ்லிம்களின் வெளியேற்றம்,அத்தோடு தீர்வுகளின் போது முஸ்லிம்களின் அபிலாஷைகள் என்பன குறித்து முஸ்லிம் கட்சிகள் தமது கருத்துக்களை தெரிவிக்கும் வகையில்,இந்த பேச்சுக்களின் எடுத்துரைக்கப்படவுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறியுள்ளார்.
தாம் விடுத்த வேண்டுகோளை ஜனாதிபதி ஏற்றுள்ளதாக தெரிவித்த அமைச்சர்,இப்பேச்சு வார்த்ததைகளுக்கான அட்டவனை தயாரிப்பு குறித்து நடவடிக்கையெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளதாவும் கூறினார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,தேசிய காங்கிரஸ் என்பன இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இடம் பெற்றுவரும் மீள்குடியேற்றப் பணிகள்,மற்றும் வடக்கிலிருந்து 1990 ஆம் முஸ்லிம்களின் வெளியேற்றம்,அத்தோடு தீர்வுகளின் போது முஸ்லிம்களின் அபிலாஷைகள் என்பன குறித்து முஸ்லிம் கட்சிகள் தமது கருத்துக்களை தெரிவிக்கும் வகையில்,இந்த பேச்சுக்களின் எடுத்துரைக்கப்படவுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறியுள்ளார்.
தாம் விடுத்த வேண்டுகோளை ஜனாதிபதி ஏற்றுள்ளதாக தெரிவித்த அமைச்சர்,இப்பேச்சு வார்த்ததைகளுக்கான அட்டவனை தயாரிப்பு குறித்து நடவடிக்கையெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளதாவும் கூறினார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,தேசிய காங்கிரஸ் என்பன இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment