Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Friday, November 26, 2010

ஏற்றுமதியாளர்களை செயலாற்ற துாண்டும் விருது வழங்கல் இன்று இடம் பெற்றது




2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் உலக பொருளாதார சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சிகளுக்கு மத்தியலு்ம் தமது ஏற்றுமதியினை சிறந்த முறையில் முன்னெடுத்த 110 இலங்கை ஏற்றுமதியாளா்களை பாராட்டி செயலாற்றுவதற்கு துாண்டுகின்ற விருது இன்று கைத்தொழில்,வணிக அமைச்சில் அமைச்சர் றிசாத் பதியுதீனினால் வழங்கி வைக்கப்பட்டது.

தலா ஒவ்வொருவருக்கும் 25 இலட்சம் வீதம் 262 மில்லியன்கள் இன்று வழங்கப்பட்டது.

இங்கு கருத்துரைத்த அமைச்சர் றிசாத் பதியுதீன்-

2011 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் வியாபார சமூகத்தின்  மீது அரசாங்கம் விசேட கவனத்தை செலுத்தியுள்ளது.உலக சந்தையில் இலங்கை வியாபார சமூகத்திற்கான தனியான இடத்தை அடைந்து கொள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆலோசனையின் பேரில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார அபிவிருத்திக்கான விஷேட செயலணி அறிமுகம் செய்த இந்த வேலைத் திட்டத்தின் மூலம்,2009 அம் ஆண்டு 960 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டதுடன்.தற்போது வழங்கப்பட்ட 262 மில்லியனுடன் மொத்தமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன்,எதிர் காலத்தில் ஏற்றுமதியாளார்களுக்கான செயலாற்று ஊக்குவிப்பு விருது வழங்க 493 மில்லியன் ரூபாய்களை அரசாங்கம் வழங்கவுள்ளதாகவும் கூறினார்.
அமைச்சின் செயலாளர் திலக் கொல்லுரே,மேலதிக செயலாளா் ஜனக சுகததாச,பணிப்பாளர் நாயகம் கோம் சேனாதீர உட்பட பலரும் இந்த நிகழ்வின் போது கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment