
சென்னை: மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது என்ற இலங்கை அதிபர்
ராஜபக்சேவின் கருத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம்
தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் எல்லை
தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து வருகிறது. அத்துடன்
அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து கொள்கிறது.