Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Thursday, July 18, 2013

வேட்பாளர்களை பங்கிடுவதில் கூட்டமைப்பிற்குள் குழப்பம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவுக்கான தீர்மானத்தினை எடுக்கமுடியாத நிலையில் மீண்டும் நாளை கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று தெரிவித்தனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் யாழ். மாவட்ட காரியாலயத்தில் இன்று மதியம் 3.30 மணியளவில் கூடிய தேர்தல் நியமனக் குழுவினர்களான தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவஞானம் சிறிதரன் உட்பட வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மற்றும் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் இரண்டாம் நாளான இன்று மீண்டும் கலந்துரையாடினர்.

சுமார் 3 மணித்தியாலயங்கள் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் 5 கட்சிகளில் இருந்தும் வேட்பாளர் தெரிவு செய்வதில் குழப்பநிலை ஏற்பட்டதால் மீண்டும் நாளை கூடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மேலும் கூறினர்.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு யாழ் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வேட்பாளர் தெரிவு மற்றும் கட்சிப்பங்கீடு போன்ற வற்றில் அனைத்துக்கட்சிகளும் இணக்கப்பட்டுக்கு வந்துள்ளதுடன் யாழ் மாவட்டத்தில் அங்கத்துவக் கட்சிகளின் பங்கீடு தொடர்பில் இழுபறி நிலை காணப்படுவதால் இறுதித்தீர்மானம் எடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment