தெஹிவளை தாருர் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் மத்ரஸா தொடர்பில் சில பெரும்பான்மை சமூகத்தினர் ஆரம்பித்துள்ள
அத்துமீறல் சம்பவம் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின்
கவனத்திற்கு,அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத்
பதியுதீன் கொண்டுவந்துள்ளார்.
தற்போது முஸ்லிம்களின் மத
வழிபாட்டு தளங்கள் மீதான தாக்குதல் சம்பவம் அதிகரித்துவருவதாகவும் இது வன்மையாக
கண்டிக்கப்பட வேண்டிய செயலென்றும்,இது குறித்து உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்
எ்ன்று அமைச்சர் றிசாத் பதியுதீன்,பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கோறிய
போது,முஸ்லிம்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையென்றும் இது குறித்து உரிய
விசாரணைக்ள் ஆரம்பிக்கப்படும் என்ற உறுதியினையும் தம்மிடம் வழங்கியுள்ளதாக அமைச்சர
றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
தம்புள்ள பள்ளிவாசல் மற்றும் குருநாகலயில்,தற்போது தெஹிவளையில் என
முஸ்லிம்களின் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்,மற்றும் அச்சுறுத்தல்
சம்பவங்களின் பின்னணயில் குறிப்பிட்ட சில பௌத்த மத குருக்கல் இருப்பதாகவும்,இவ்வி்டயத்தில்
சட்ட நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என்றும் தாம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
கோத்தபாய ராஜபக்ஷவிடம் வலியுறுத்தி தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும்
கூறினார்.
அதே வேளை தெஹிவளை மேயருடன் தொடர்பு கொண்ட அமைச்சர் றிசாத் இவ்விடயம் குறித்து நீண்டநேரம் தொலைபேசியில்
கலந்துரையாடியுள்ளார்.
அதே நிலையில் இன்று(2012-05-27) ஆம் திகதி இது குறித்து கலந்துரையாடல்கள்
நடத்தப்படவுள்ளதாகவும்,சகல சமூகங்களினதும் மத உரிமை பாதுக்கப்படும் என்று தம்மிடம்
தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
பள்ளிவாசல் மீது அடாவடித்தனம் செய்ய வந்த பௌத்த மத குருக்களை வெள்ளிக்கிழமை
மாலை பொலீஸார் விரட்டியதுடன்,பள்ளிவாசலின் பாதுகாப்புக்காக பெரும் எண்ணிக்கையிலான
பாதுகாப்பு அதிகாரிகள் காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment