மக்களைினது
உயிர்களையும்,சொத்துக்களையும் காவு கொண்ட கொடூர யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்து
3 வருங்டகள் ஆன நிலையில்,சர்வதேச நாடுகளும்,அங்கு வாழும் சில புலம் பெயர் அமைப்புக்களும்
தொடராக இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு மத்தியில் இலங்கை நாட்டில்
வாழும் அனைத்து மக்களும் சமமானவர்களே என்பதனை உறுதிப்படுத்தியுள்ள ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான அரசாங்கம் மக்கள்
நலன் திட்டங்களை எவ்வித குறைபாடுகளுமின்றி செய்து வருவதை எம்மால் பார்க்க முடிகின்றது.
2009
ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட வடக்கின் நிலையினையும்,தற்போதைய சமாதான சூழலில் காணப்பட்டுவரும்
மாற்றங்களையும் ஒப்பீட்டு பார்ப்பது காலத்தின் தேவையாகும் .தமிழீழ கோறிக்கை தான் வெற்றியளிக்கும்
அதற்காக வியூகங்கள் வகுகப்கப்ட்டு நோர்வே போன்ற நாடுகளின் அனுசரனையில் நடத்தப்பட்ட
வடக்கின் ஆட்சியில் மக்கள் பட்ட துன்ப துயரங்களை இன்னும் அந்த மக்கள் மறக்க வில்லையென்பதை
தினமும் கேட்கக் கூடியதாகவுள்ளது.இவ்வாறான மன நிலைக்குள் வலிந்து தள்ளப்பட்ட வடக்கு
மக்கள் இன்று அதிலிருந்து விடுபட்டு தமது
பிரதேசம்,எமக்கு தேவை அபிவிருத்தி அதனுாடாக சமூக மேம்பாடு என்று என்பதை வெளிப்படுத்தும்
அளவுக்கு வதைக்கப்பட்டுள்ளது தான் யதார்த்தமாகும்.
குறிப்பாக
வடக்கில் முல்லைத்தீவு மாவட்டம் என்பது யுத்தம் மற்றும் சுனாமி கடல் கோல் அனர்த்தத்தால்
பதிப்புக்குள்ளான மாவட்டமாகும்.தமிழர்களும்,முஸ்லிம்களும்,மிகவும் நெருக்கமாக வாழும்
பிரதேசமாகும்.வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மான் ஆலயம் அமைந்துள்ளது
இம்மாவட்ட தமிழ் மக்களுக்கு பெருமையளிக்கும் ஒன்றாக கருதப்படுகின்றது.அதே போன்று இஸ்லாமியர்களும் தமது பதிவுகளை இங்கு கொண்டுள்ளமை இனங்களுக்கிடையில்
புரிந்துணர்வு ஏற்படுவதற்கு சிறப்பான காரணமாகும்.
இவ்வாறான
சூழலில் இன்று முல்லைத்தீவு மாவட்டம் பல அபிவிருத்திகளை கண்டுவருகின்றது.அழிந்து போன
கட்டிடங்கள் புது பொழிவு பெறுகின்றது.குண்டும் குழுயுமாக காணப்பட்ட பாதைகள் நவீன வீதிகளாக
மாற்றப்பட்டு வருகின்றன.வீதித் தடைகளும்ஈசோதனை சாவடிகளும் அகற்றப்பட்டு மக்கள் சுதந்திரமாக
இரவு பகல் பாராது பயணிக்க கூடிய சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது.இவற்றை கொண்டுவருவதில்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில்,பெருளாதார அபிவிருத்தி அமைச்சர பஷில்
ராஜபக்ஷவின் வழிகாட்டுதலில்,வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின தலைவரும்,அமைச்சருமான
றிசாத் பதியுதீனின் செயற்பாட்டில்,பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,மற்றும் ஜனாதிபதியின்
இணைப்பாளர் கணகரத்தினம் அவர்களின் திறமையான மக்கள சிந்தனை போக்கின் வெளிப்பாடே இதற்கு
காரணமாகும் என்றால் அது மிகையாகாது.
புளியங்குளம்
முதல் நெடுங்கேனி,ஒடடுச்சுட்டான்,முல்லைத்தீவு வரை,முல்லைத்தீவிலிருந்து புதுக்குடியிறுப்பு,கிளிநொச்சி
வரைக்குமான பாதைகள் இன்று நவீன முறையில் கொன்க்கிறீட் மற்றும் காபட் பாதைகளாக மாற்றப்பட்டு
வருகின்றது.மின்சாரமற்ற கிராமங்கள் மின்சாரத்தை பெறுகின்றது.இது வரைக்கு முல்லைத்தீவு
மாவட்டத்தில் 22 சதவீதமான பிரதேசங்கள் மின்சாரத்ததை பெற்றுக்கொண்டுள்ளன.எஞ்சிய கிராமங்கள்
இவ்வருடம் இறுதிக்குள்ள பெற்றுக் கொள்வதற்கான திட்டங்களும் அமைச்சர றிசாத் பதீயுதீனின்
பணிப்புரையின் பேரில் நடை முறைப்படுத்தப்படுகின்றது.அதே போல் பாடசாலை,அரச கட்டிடங்கள்,பஸ்
தரிப்பு நிலையங்கள்,பொது நோக்கு மண்டபங்கள்,சந்தைப் கட்டிட தொகுதிகள்,பலநோக்கு கூட்டுறவு
சங்கங்கள்,மருத்துவ நிலையங்கள்,கால் நடை சுகாதார திணைக்களங்கள,விளையாட்டு மைதானங்கள்
எனபன தற்போது முல்லையினை புதுப் பொழிவுககுட்படுததிவருகின்றதை காணமுடிகின்றது.
இவற்றுக்
மேலாக இப்பரதேச மக்களது பங்களிப்பு காத்திரமானதாக இருப்பதை காண்முடிகின்றது.வடமாகாண
ஆளுநர் ஜீ.ஏ.சந.திரசிறி அமைச்சர் றிசாத் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில்,விவசாய,கால்நடை,கடற்றொழில்
மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துவருவது
இப்பிரதேச மக்களுக்கு வரப்பிரசாதமாகும்.ஒட்டு மொத்தமாக முல்லைத்தீவு மாவட்டமானது,இன
ஒற்றுமைக்கு வழியுற்படுத்தியுள்ள மாவட்டத்தை போன்று துரித அபிவிருத்தியினை கண்டுவரும்
மாவட்டத்தில் மிக முக்கியமானதாகும்என்பது சிலாகிக்கப்பட வேண்டியதாகும்.
------------
எழுதுவது இர்ஷாத் றஹ்மத்துல்லா -------------------------
No comments:
Post a Comment